காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் இடம்பெறும் பகுதியில் நேற்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
இவ்வூடக சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
"ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திக்க உள்ளதாக தெரிவித்து கிளிநொச்சி அரசாங்க அதிபர் ஊடாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அறிகின்றோம்.
ஜனாதிபதி எதற்காக சந்திக்கின்றார்? காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்கு நட்ட ஈடு வழங்க சந்திக்கின்றாரா? வடமாகாண ஆளுனர் அலுவலகத்தில் வைத்து எம்மை சந்தித்த ஜனாதிபதி இன்றுவரை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, இந்நிலையில் நாளை இடம்பெறவுள்ள சந்திப்பு எதற்காக? வெளிநாட்டு ராஜதந்திரிகளை ஏமாற்றுவதற்காகவா?,
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் என நாம் இங்கு உள்ள நிலையில், இவர்கள் அழைத்து செல்வது யாரை? இந்த ஊடக சந்திப்பின் மூலம் நாம் பகிரங்கமாக தெரியப்படுத்துவது யாதெனில்,
நாளை இடம்பெறும் சந்திப்பில் கலந்து கொள்பவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அல்ல, அவர்கள் அழைத்து செல்பவர்கள் எப்படியானவர்கள் என்பது எமக்கு தெரியாது" , என தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM