தொடரும் சீரற்ற காலநிலை : மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை நீடிப்பு.!

Published By: Robert

06 Sep, 2017 | 08:44 AM
image

Image result for மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை நீடிப்பு

நாட்டில் தொடர்ச்­சி­யாக நிலவும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக நுவ­ரெ­லியா மற்றும் காலி மாவட்­டங்­களில்   மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் அங்­கி­ருக்கும் மக்­களை பாது­காப்­பான பிர­தே­சங்­க­ளுக்கு செல்­லு­மாறும் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

களுத்­துறை, கேகாலை, இரத்­தி­ன­புரி, காலி ஆகிய நான்கு மாவட்­டங்­க­ளுக்கு ஏற்­க­னவே மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் நேற்று மேல­தி­க­மாக நுவ­ரெ­லியா மாவட்­டத்­துக்கும் இந்த  எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது.

இது தொடர்பில் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் விடுத்­துள்ள விசேட அறிக்­கை­யொன்­றி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்­ளது.

அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

நாட்டில் ஏற்­பட்­டுள்ள அசா­தா­ரண கால­நிலை மாற்­றத்தால் பெரும்­பா­லான பகு­தி­களில் தொடர்ந்தும் அதிக மழை­வீழ்ச்சி பதி­வா­கி­வ­ரு­கின்­றது.

அத­ன­டிப்­ப­டையில் கடந்த 24 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் 100 மில்லி மீற்றருக்கும் மேல் அதிக மழை­வீழ்ச்சி நாட­ளா­விய ரீதியில் பதி­வா­கி­யுள்­ளது. குறித்த மழை­வீழ்ச்­சி­யா­னது எதிர்­வரும் நாட்­களில் மேலும் அதி­க­ரிக்­கக்­கூடும் என்­பதால் நுவ­ரெ­லியா மற்றும் காலி ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்­கை­யா­னது தொடர்ந்தும் நீடிக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக நுவ­ரெ­லியா மாவட்­டத்தின் அம்­ப­க­முவ பிர­தேச சபைக்­குட்­பட்ட பகு­திகள் மற்றும் அதனை அண்­டிய பிர­தே­சங்கள், களுத்­துறை மாவட்­டத்தின் அக­ல­வத்தை, புளத்­சிங்­கள, பலிந்­த­நு­வர ஆகிய பிர­தேச சபை­க­ளுக்­குட்­பட்ட பகு­திகள் மற்றும் அதனை அண்­டிய பகு­தி­க­ளுக்கும், கேகாலை மாவட்­டத்தின் யட்­டி­யாந்­தோட்டை பிர­தேச சபைக்­குட்­பட்ட பகு­திகள் மற்றும் அதனை அண்­மித்த பகு­தி­க­ளுக்­கும் மண்­ச­ரிவு ஏற்­ப­டு­வ­தற்­கான முன்­னெச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் இரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் குரு­விட்ட பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட பகு­திகள் மற்றும் அதனை அண்­மித்த பகு­தி­க­ளுக்கும், காலி மாவட்­டத்­தின் நெலுவ பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட பகு­திகள், மற்றும் அதனை அண்­மித்த பகு­தி­க­ளுக்கும், யத்­த­ள­மத்த பிர­தே­சத்­திலும் இவ்­வாறு மண்­ச­ரிவு அபாயம் ஏற்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யங்கள் காணப்­ப­டு­வ­தா­கவும் தேசிய கட்­டட ஆய்­வுகள் நிறு­வனம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. 

இவ்­ அ­றி­வித்­த­லா­னது நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இரவு 10 மணி­முதல் இன்று புதன்­கி­ழமை இரவு 10 மணி­வ­ரை­யான  24 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு தொடர்ந்தும் அமுலில் இருக்­கு­மெ­னவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

இதனால் மண்­ச­ரிவு ஏற்­படும் அபாய வல­ய­மாக அறி­விக்­கப்­பட்ட பகு­தி­களில் தற்போது நிலவும் மழை காலநிலை தொடர்ந்தால் நிலச்சரிவு, பாறைகள்  இடிந்து விழுதல்,  நிலத்தாழ்வு உள்ளிட்ட அனர்த்தங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

எனவே அங்கு மலைப்பாங்கான பிரதேசங்களில் வாழும் மக்கள் அதிக மழை பெய் யும் சந்தர்ப்பங்களின் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13