நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கிருக்கும் மக்களை பாதுகாப்பான பிரதேசங்களுக்கு செல்லுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, காலி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஏற்கனவே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலதிகமாக நுவரெலியா மாவட்டத்துக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை மாற்றத்தால் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்தும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகிவருகின்றது.
அதனடிப்படையில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 100 மில்லி மீற்றருக்கும் மேல் அதிக மழைவீழ்ச்சி நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ளது. குறித்த மழைவீழ்ச்சியானது எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் நுவரெலியா மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையானது தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள், களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை, புளத்சிங்கள, பலிந்தநுவர ஆகிய பிரதேச சபைகளுக்குட்பட்ட பகுதிகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கும் மண்சரிவு ஏற்படுவதற்கான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கும், காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகள், மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கும், யத்தளமத்த பிரதேசத்திலும் இவ்வாறு மண்சரிவு அபாயம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் தேசிய கட்டட ஆய்வுகள் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ் அறிவித்தலானது நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிமுதல் இன்று புதன்கிழமை இரவு 10 மணிவரையான 24 மணித்தியாலங்களுக்கு தொடர்ந்தும் அமுலில் இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மண்சரிவு ஏற்படும் அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது நிலவும் மழை காலநிலை தொடர்ந்தால் நிலச்சரிவு, பாறைகள் இடிந்து விழுதல், நிலத்தாழ்வு உள்ளிட்ட அனர்த்தங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
எனவே அங்கு மலைப்பாங்கான பிரதேசங்களில் வாழும் மக்கள் அதிக மழை பெய் யும் சந்தர்ப்பங்களின் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM