நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்வரும் நாட்களில் தொடர்ந்தும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது,
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் தற்போது பாரியளவில் மழைவீழ்ச்சி பதிவாகிவருகின்றது. அதனடிப்படையில் பெரும்பாலான பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் மேற்பட்ட அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகி வருகின்றது.
மேலும் தொடர்ச்சியாக மழைபெய்து வருவதால் இன்று மற்றும் நாளை 100 மில்லிமீற்றருக்கும் 150 மில்லிமீற்றருக்கும் இடைப்பட்ட மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக ஊவா, மேல், மத்திய, வடக்கு, மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும். அச்சந்தர்ப்பங்களில், இடியுடன் கூடிய கடுமையாக மழைவீழ்ச்சி கிடைக்கும். அதன்போது குறித்த பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.
இந்நிலையில் திருகோணமலை மாவட்டம் உள்ளிட்ட ஏனைய சில இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நா கொடை பிரதேசத்தில் மாத்திரம் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமாக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பொழியும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இந்நேரங்களில் பொதுமக்கள் தொலைபேசி மற்றும் மின்னியல் சாதனங்களை பயன்படுத்தும் போது பாதுகாப்பாகவும், விழிப்புணர் வுடனும் செயற்படுமாறும் வளிமண்டல திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM