நாட்டின் பல பகுதிகளிலும் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சப்ரகமுவ, ஊவா, மாகாணங்களுடன் களுத்துறை, காலி, மாத்தறை, கொழும்பு, கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களில் 100 மில்லி மீட்டர் மழையை எதிர்பார்ப்பதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
காலி மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் பெய்த கடுமையான மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
காலி - பத்தேகம, உடுகம, நாகொட உள்ளிட்ட வீதிகள் உட்பட ஏராளமான வீதிகளை வெள்ளம் மூழ்கடித்துள்ளது.
காலியை அண்மித்த மாத்தறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இவ்வாறான வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்தில் கடுமையான சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அளுத்கம - கந்தவிகாரையைச் சுற்றியுள்ள வீதிகள், வீடுகள், வியாபார நிலையங்கள் என்பன வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது.
மாது கங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அதனை சுற்றிவுள்ள பிரதேசமும் நீரில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாகொட பிரதேசத்தில் மாத்திரம் 200 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பின் பல பகுதிகளில் தற்போது பலத்த மழை பெய்து வருகின்றது.
இதன் காரணமாக நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, இரண்டு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண் சரியக்கூடிய இடங்களிலிருந்து மக்கள் வெளியேறுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. காலி, நுவரெலிய ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பொலன்னறுவை – கதுருவெல பகுதியில் நான்கு கிராம அலுவலர் பிரிவுகளில் ஏற்பட்ட கடும் காற்றின் காரணமாக சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் அப்பகுதியில் மின்சாரம் விநியோகம் தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கொழும்பு தொடக்கம் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM