இலங்கை கிரிக்கெட் அணி தற்போது இந்திய அணியுடன் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளும் மோதிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் ஒரேஒரு இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி நாளை கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்தத் தொடர் நிறைவடைந்தவுடன் இலங்கை அணி பாகிஸ்தானுடன் மோதவுள்ளது.
இந்தத் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகின்றது.
அனைத்து சர்வதேச அணிகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து வருகின்றன. இதனால் பாகிஸ்தான் தனது போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தி வருகிறது.அந்த வகையில் இலங்கை -– பாகிஸ்தான் அணிகள் மோதும் தொடரையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இம்மாத இறுதியில் நடத்துவதற்கு முடிவுசெய்துள்ளது.
அதன்படி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இம்மாதம் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்டாக நடைபெறவுள்ளமை விசேட அம்சமாகும்.
காரணம் இலங்கை அணி முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது.
பாகிஸ்தான் சென்று விளையாடவுள்ள அணியைத் தேர்வு செய்வதற்கான முதற்கட்ட அணியை இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் நேற்று அறிவித்தது.
அதன்படி 25 பேர் கொண்ட அந்த குழாமில் சில வீரர்கள் மீண்டும் அணிக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர். அதன்படி காயம் காரணமாக போட்டிகளிலிருந்து விலகியிருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான தம்மிக்க பிரசாத் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
அதேபோல் டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராகக் களமிறங்கும் கௌஷால் சில்வாவும் அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணித் தலைவரான உபுல் தரங்க கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் டெஸ்ட் தொடருக்கு உள்வாங்கப்படவில்லை என்றும் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி பாகிஸ்தான் தொடருக்கான முதற்கட்ட அணி வீரர்களின் விபரம்...
சந்திமால் (அணித் தலைவர்), திமுத் கருணாரத்ன, கௌஷால் சில்வா, குசல் மெண்டிஸ், மெத்தியூஸ், திரிமான்ன, திக்வெல்ல, சதீர சமரவிக்கிரம, ரங்கன ஹேரத், சுரங்க லக்மால், நுவன் பிரதீப், சந்தகான், விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார, ஜெப்ரி வெண்டர்சே, மிலிந்த சிறிவர்தன, தனஞ்ய டிசில்வா, துஷ்மந்த சமீர, தில்ருவன் பெரேரா, மலிந்த புஷ்பகுமார, ரொஷேன் சில்வா, அகில தனஞ்சய, சரித் அசலங்க, சமிந்த எரங்க, தம்மிக்க பிரசாத்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM