தமிழத் திரைப்பட நடிகர் ரஜினிகாந்துக்கு நாட்டின் உயரிய கௌரவங்களில் ஒன்றான பத்ம விபூஷண் விருதை மத்திய அரசு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் பெறுவோர் விபரம் தற்போது வெளியாகியுள்ளது. வாழும் கலை குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கும் பத்ம விபூஷண் விருது வழங்கப்படவுள்ளது. 2016ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளில், ரிலையன்ஸ் நிறுவனர் மறைந்த திருபாய் அம்பானி பத்ம விபூஷண் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டுத் துறையில், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவல், டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா ஆகியோர் பத்ம பூஷண் விருது பெறுகின்றனர்.இதுதவிர, கணக்கு மற்றும் தணிக்கைத் துறை முன்னாள் தலைவர் வினோத் ராய், நடிகர் அனுபம் கேர், பாடகர் உதித் நாராயணன் ஆகியோருக்கும் பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது. இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் ராபர்ட் பிளாக்வில்லுக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது. மூத்த வழக்கறிஞர் உஜ்வால் நிகாம், இந்தி திரைப்பட நடிகர்கள் அஜய் தேவ்கன், பிரியங்கா சோப்ரா, பாகுபலி திரைப்பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி, போஜ்பூரி மொழிப் பாடகர் ஹுய் லான் சாங் உள்ளிட்டோர் பத்மஸ்ரீ விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM