முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தலைமையில் "எளிய" (வெளிச்சம்) எனும் புதிய அமைப்பொன்று நாளை உதயமாகின்றது. புதிய அரசியல் அமைப்பின் சவால்கள் மற்றும் அச்சுறுத்தல் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இந்த அமைப்பின் முதல் கூட்டம் நாளை பொரலஸ்கமுவையில் இடம்பெறவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட பொது எதிரணியின் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் அரசியல் பிரவேசம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் பரிமாற்றபட்டு வரும் நிலையில் "எளிய" எனும் பெயரில் அவர் புதிய அமைப்பொன்றை உருவாக்கவுள்ளார். கோத்தபாய ராஜபக்ஷ தலைமை தாங்கும் இந்த அமைப்பில் பல்வேறு அரசியல் மற்றும் சிவில் பிரமுகர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த அமைப்பின் முதல் கூட்டம் நாளை 6 ஆம் திகதி பொரலஸ்கமுவை பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது. இது அவரது அடுத்தகட்ட நகர்வாகவும் அரசியலில் தன்னை இணைத்துக்கொள்ளும் ஆரம்ப நகர்வாகும் அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதபோன்று சகல இலங்கை பிரஜைகளினதும் எதிர்பார்ப்புகளை ஒளியேற்றும் நோக்கத்தில் ஏற்றப்படும் தீபம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இந்த அமைப்பின் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட பொது எதிரணி உறுப்பினர்களும் ஏனைய பிரமுகர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM