கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற ரயில் அட்டன் பகுதியில் ஏற்படவிருந்த பாரிய விபத்தொன்றிலிருந்து ரயில் பாதை ஊழியர் ஒருவரின் சாதுரியமான செயற்பாட்டால் தடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பதுளை ரயில் சேவை ஒரு மணித்தியாலத்தின் பின் மீண்டும் இடம்பெற்றதாக அட்டன் ரயில் நிலைய அதிகாரி தெரிவித்தார்.
அட்டன் சிங்கமலை சுரங்கப் பதைக்குள் ரயில் தண்டவளத்தில் கணப்பட்ட வெடிப்பை கண்டு அட்டன் ரயில் நிலையத்திற்கு தொடர்பை உடனடியாக ஏற்படுத்த முடியாத நிலையில் விரைந்து செயற்பட்ட குறித்த ஊழியர் சிங்கமலை சுரங்கத்தினுள்ளிருந்து ஓடி வந்து எதிரே அட்டன் ரயில் நிலையத்திலிருந்து பதுளை நோக்கி பயணத்தை மீண்டும் ஆரம்பித்த ரயிலை சிவப்பு சமிக்ஞை காட்டி நிறுத்தியுள்ளார்.
காலிங்க பண்டார எனும் குறித்த ஊழியரின் சிறப்பான செயற்பாட்டினால் சிங்கமலை சுரங்கத்தினுள் இடம்பெறவிருந்த பாரிய அனர்த்தமொன்றும் தவிர்க்கப்பட்டுள்ளது.
அட்டன் ரயில் நிலையத்தை வந்தடைந்த ரயில் இன்று மதியம் 1.45 மணியளவிலேயே மீண்டும் பதுளை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கையிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உடைந்து காணப்பட்ட ரயில் தண்டவாளப்பகுதி அட்டன் ரயில் நிலைய ஊழியர்களினால் திருத்தியமைக்கப்பட்ட பதுளைக்கான ரயில் சேவை சுமார் ஒரு மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM