தெபரவெவ தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவியை வீரவில பகுதியில் வைத்து இரு இளைஞர்கள் கடத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக வீரவில பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாடசாலையின் பின்னரான மேலதிக வகுப்புகளுக்கு திஸ்ஸமஹாராமவிற்கு சென்ற மாணவி வீரவில எனும் பகுதியில் வைத்து இரு இளைஞர்களால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக தமது ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரிய வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடத்தப்பட்ட மாணவி 16 வயது உடையவர் என்றும் மூன்று பெண்பிள்ளைகள் உள்ள குடும்பத்தின் இரண்டாவது பெண்பிள்ளையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் தந்தை காமினி ஜயதிலக குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பாக தெரிவிக்கையில்,
“ எனது மகள் கடந்த 29 ஆம் திகதி மேலதிக வகுப்புகளுக்காக திஸ்ஸமஹாராமவிற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன்,
நான் நினைக்கிறேன் எனது மகளுக்கு காதல் தொல்லை கொடுத்த எனது வீட்டின் அருகிலுள்ள இளைஞர்களே அவரை கடத்தியிருக்க வேண்டும் என, குறித்த சம்பவத்திற்கு பின்னர் அந்த இரு இளைஞர்கள் தலைமறைவாகிவிட்டனர்”
குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பாக வீரவில பொலிஸார் பல விதங்களிலும் விசாரணைகளையும் ,தேடுதல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM