எனக்கு வேலை­யில்­லை­யென நினைத்­து­ விட்­டீர்­களா? - மஹிந்த ஆவேசம்

Published By: Priyatharshan

04 Sep, 2017 | 11:31 AM
image

எனது தலை­மைப்­பொ­றுப்பின் கீழான காலப்­ப­கு­தியே ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சிக்­கான பொற்­கா­ல­மாகும். அதனை தற்­போ­துள்­ள­வர்கள் மறந்து விட்­டார்கள் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ குற்றம் சாட்­டினார். 

 3 ஆம் திகதி நடை­பெறும் மாநாட்டில் கலந்­து­கொள்ள  31ஆம் திகதி இரவு அறி­வித்­த­வுடன் மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்கு நான் வேலைப்­ப­ளு­வற்­றவன் கிடை­யாது எனவும் சுட்­டிக்­காட்­டினார். 

காலி ரத்­கமை மஹா­மண்­ட­ல­ரா­மய விகா­ரையில் இடம்­பெற்ற நிகழ்­வொன் றில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

முன்னாள் ஜனா­தி­பதி எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்­க­வினால் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக்கட்சி செப்­டெம்பர் இரண்டாம் திக­தியே உரு­வாக்­கப்­பட்­டது. பின்னர் அவர் வழி­வந்த தலை­வர்­களால் கட்சி மென்­மேலும் மேம்­ப­டுத்­தப்­பட்­டது.  

இந்­நி­லையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியின் 66 ஆவது பூர்த்­திக்­கொண்­டாட்ட நிகழ்­வுகள்   3 ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்­ள­தாக கடந்த 31 ஆம் திகதி இரவே எனக்கு தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். எமது ஆட்­சிக்­கா­லத்தில் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளுக்கு முன்­கூட்­டி­ய­தா­கவே அறி­வித்­து­வி­டுவோம்.  ஆனால் குறு­கிய காலத்தில் இவ்­வாறு அறி­வித்தல் விடுத்­த­வுடன் மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்கு நான்  வேலைப்­ப­ளு­வற்­றவன் கிடை­யாது. இதுவே நான் குறித்த சம்­மே­ள­னத்தை தவிர்ப்­ப­தற்கும் கார­ண­மாக அமைந்­தது. இவ்­வாறே தற்­போ­தைய கட்­சியின் செயற்­பா­டுகள் இருக்­கின்­றன.

இது­வ­ரை ­கா­லமும் கட்­சியின் செயற்­பா­டு­களை பொறுத்­த­வ­ரையில் என்­னு­டைய தலை­மையின் கீழான ஆட்சிக் காலத்­தி­லேயே ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்சி மறு­ம­லர்ச்சி பெற்­றது என்­பதை பெரு­மை­யுடன் கூறிக்­கொள்­கின்றேன்.

நான் இவ்­வாறு குறிப்­பி­டு­வ­தற்­கான கார­ண­முள்­ளது. குறிப்­பாக முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க என்­னிடம் தலை­மைப்­பொ­றுப்பை கைய­ளிக்கும் போது ஸ்ரீ­லங்கா சுதந்­திர கட்­சியில் 56 உறுப்­பி­னர்­களே அங்கம் வகித்­தனர். அதன்­பின்னர் நான் தலைமைப் பொறுப்­பேற்று முன்­னெ­டுத்த வேலைத்­திட்­டங்­க­ளுக்­க­மைய 56 பாராளுமன்ற உறுப்­பி­னர்­க­ளாக இருந்த தொகை­யா­னது 128 பாராளுமன்ற உறுப்­பி­னர்­க­ளாக  உயர்ந்­தது.  

அது­மட்­டு­மல்­லாமல் சகல மாகாண சபை­களும், நூற்­றுக்கு 90 சத­வீத பிர­தேச சபை­களும் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக்கட்­சியின் கட்­டுப்­பாட்­டி­லேயே இயங்­கின. ஆகவே என்­னு­டைய தலை­மையில் கீழான ஆட்­சிக்­கா­லமே ஸ்ரீ­லங்கா சுதந்திரக்கட்சிக்கான பொற்காலமாகும். அதுவே சிறந்த கட்சிக் கான பலம்மிக்க நாட்களாகும். 

அதனை தற்போது மறந்து விட்டனர். தற்போது கட்சியின் பலம் நலிவற்றுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயற்படும் வரை இந்நிலை தொடரும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31