நல்லாட்சி தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் மாதம் தீர்மானம் எடுக்கவேண்டும் என்பதில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மிகவும் உறுதியாக இருப்பதாக கட்சி மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2020 ஆம் ஆண்டு வரை தேசிய நல்லிணக்க அரசாங்கத்தை தொடரவேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருந்தாலும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் அதிருப்தியுடனேயே இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக டிசம்பர் மாதமளவில் தேசிய அரசாங்கம் தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கவேண்டும் என்பதில் சுந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் உறுதியாக இருக்கின்றனர்.
புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாட்டிலும் இரண்டு பிரதான கட்சிகளுக்குமிடையில் முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. விசேடமாக புதிய அரசியலமைப்பை உருவாக்கி சர்வஜன வாக்கெடுப்பிற்கு உட்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ள நிலையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியானது அரசியலமைப்பு மாற்றத்தை மேற்கொண்டு மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றினால் போதுமானது என தெரிவித்து வருகின்றது.
அதுமட்டுமன்றி தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலும் இரண்டு கட்சிகளுமிடையில் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. மாகாணசபைத் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தவேண்டும் என்ற நோக்கத்தில் 20 ஆவது திருத்தச் சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும் 20 ஆவது திருத்த சட்டமாக தேர்தல் முறை மாற்றமே முன்னெடுக்கப்படவேண்டும் என்று சுதந்திரக்கட்சி கூறிவருகின்றது. அதாவது தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக மாகாணசபைத் தேர்தல்கள் ஒரே தினத்தில் நடத்தப்படவேண்டும் என்ற நோக்கம் இருந்தாலும் அதனூடாக மாகாணசபைத் தேர்தல்கள் தாமதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என சுதந்திரக்கட்சி கூறிவருகிறது.
இந்நிலையிலேயே தேசிய அரசாங்கம் தொடர்பில் டிசம்பர் மாதம் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கவேண்டும் என்பதில் சுதந்திரக்கட்சி உறுதியாக இருக்கின்றது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கியதேசியக்கட்சி 106 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 95 ஆசனங்களையும் பெற்றன.
இரண்டு பிரதான கட்சிகளுக்கும் தனித்து ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் கிடைக்காமையின் காரணமாக இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை நிறுவின. எனினும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சில பங்காளிக்கட்சிகளின் எம்.பி.க்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து கூட்டு எதிரணியினர் என்ற பெயரில் செயற்பட்டு வருகின்றனர்.
2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம்திகதியிலிருந்து இரண்டு வருடங்களுக்கு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. இவ்வருடம் ஆகஸ்ட் மாதம்21 ஆம் திகதியுடன் இரண்டு வருடம் நிறைவடைந்துவிட்ட போதிலும் டிசம்பர் மாதம் வரை தேசிய அரசாங்கம் நீடிக்கவுள்ளது. அதன் பின்னரும் தேசிய அரசாங்கத்தை நீடிக்கவேண்டும் என்பதில் ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியாக இருக்கின்போதிலும் சுதந்திரக்கட்சியின் சில உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM