மற்றுமொரு கோர விபத்து : பௌத்த பிக்குணி பலி

Published By: Robert

03 Sep, 2017 | 03:42 PM
image

யாழ் - கண்டி வீதியான ஏ9 வீதியில் திறப்பனை பிரதேசத்தில் அலிஸ்தான் வளைவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பௌத்த பிக்குணி ஒருவர் பலியானதுடன் பிக்கு உட்பட 7 பேர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வலப்பனையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த குறித்த வேன் வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வேனில் பயணித்த வலப்பனை கீர்த்தி பண்டாராராமயவில்லைச் சேர்ந்த 65 வயதனா பிக்குணியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரத்திற்கு யாத்திரைக்கு சென்றவேளையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, குறித்த வாகனத்தில் 11 பேர் பயணித்ததாகவும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவோர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திறப்பனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15