முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 66ஆவது மாநாட்டில் பங்கேற்பதற்கு மூன்றாவது அழைப்பினை நான் விடுக்கின்றேன். மாநாட்டில் அவருக்கு உரிய கதிரையும் தயாராகவே உள்ளது என பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக் ஷ தாய் வீட்டிற்கு வரும்போது வரவேற்க தயாராகவே இருக்கின்றோம் என்று குறிப்பிட்ட அவர் மைத்திரியையும் மஹிந்தவையும் வேறுவேறாக பார்க்கவில்லையென்றும் 66 ஆவது மாநாடே ஒன்றிணைவதற்கான உரிய சந்தர்ப்பம் எனவும் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரக்கட்சியின் 66ஆவது மாநாடு தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு காலியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பல குழப்பங்கள் காணப்படுவதாகவும் கட்சியை அங்கும் இங்கும் இழுத்துச்செல்வதாகவும் அண்மைக்காலங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. எவ்வாறாயினும் கட்சியின் 66ஆவது ஆண்டு நிறைவு மாநாட்டில் அனைவரும் ஒன்றுகூடுவதற்கான சந்தப்பம் ஏற்பட்டுள்ளது.
66ஆவது ஆண்டு மட்டும் அல்ல 70ஆவது ஆண்டு நிறைவு மாநாடும் சுதந்திரக்கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் நிச்சயமாக நடைபெறும் என்பதை நான் உறுதியுடன் கூறுகின்றேன்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வரலாற்றில் நோக்கும் போது நெருக்கடிகளைச் சந்தித்து வெற்றிபெற்றுள்ளமையை அவதானிக்க முடியும். சுதந்திரக்கட்சியுடன் சிறு கட்சிகள் கூட்டணியைக் கொண்டிருக்கின்ற போதும் சிறு குழுவொன்று சுதந்திரக்கட்சியை சிதைத்துக்கொண்டு செல்வதற்கு முயற்சிக்கின்றது.
அதேநேரம் அந்தக்குழுவினருக்கு தலைமைத்துவத்தினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்குகின்றார். முன்னாள் ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷவே நீங்கள் தற்போதும் ஜனாதிபதி தான். உங்களுக்கு ஏற்கனவே இரண்டு அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளது. நான் மூன்றாவது தடவையாகவும் அழைப்பு விடுகின்றேன். நீங்கள் கட்டாயமாக 66ஆவது மாநாட்டுக்கு வருகை தரவேண்டும்.
மாநாட்டில் உங்களுக்கு பொருத்தமான கதிரையை நாம் தயாராக வைத்துள்ளோம். மைத்திரிபால சிறிசேன எங்கிருக்கின்றாரோ அங்கே தான் உங்களுக்கும் ஆசனம் வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் உங்களையும் நாங்கள் இருவராகப் பார்க்கவில்லை. ஒருவராகவே பார்க்கின்றோம்.
அதேநேரம் உங்களை நாங்கள் இவ்வளவு தூரம் ஏன் அழைக்கின்றோம் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் தவாறான ஓர் இடத்தில் இருக்கின்றீர்கள். நீங்கள் தாய்வீட்டுக்கு வருகை தரும்போது உரிய மரியாதைகளுடன் வரவேற்க தயாரகவே உள்ளோம்.
நீங்கள் வருவது எமது கட்சிக்கு பெரும்பலமாகும். அடுத்த தேர்தலில் சுதந்திரக்கட்சி வெற்றி பெறுவதற்கு நீங்கள் எம்முடன் இருக்க வேண்டும். நீங்களும்(மஹிந்தவும்) மைத்திரியும் இரண்டு பக்கம் இருந்து விளையாட்டு வீட்டை அமைக்காது எங்களையும் நெருக்கடிக்குள்ளாக்காது சக்தி மிக்க அத்திவாரத்தினை சுதந்திரக்கட்சிக்கு இடுவதற்காக ஒன்றிணையுமாறு கோரிக்கை விடுகின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM