ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது மாநாடு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் தலைமையில் இன்று கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் பின்னர் கட்சி முக்கிய தீர்மானங்கள் பலவற்றை எடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாநாட்டிற்கு கட்சியின் போசகராக செயற்பட்டு வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உள்ளி ட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சகல உறுப்பினர்களுக்கும் கட்சி மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அழைப்பினை உதாசீனம் செய்து கலந்து கொள்ளாதவர்களுக்கு இனிவரும் இதுபோன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு அழை ப்பு விடுக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் மாநாட்டின் பின்னர் கூட்டு
எதிரணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த குமார வெல்கம, பிரசன்ன ரணதுங்க, ரஞ்ஜித் சொய்சா, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவுக்கு அழைக்கப்படவுள்ளதாகவும் அதற்கான தீர்மானத்தை கட்சி எடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.
அதேபோன்று இதற்கு முன்னர் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளியாக கருதப்பட்டுள்ள புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்தவை கட்சியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுதந்திரக் கட்சியின் 66 ஆவது மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கான அழைப்பிதழை வீட்டிற்கே அனுப்பியதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் இன்று நடைபெறவுள்ள சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ மற்றும் கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் சுதந்திர கட்சியை சேர்ந்தவர்களும் கலந்துகொள்ளமாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM