அலவத்துகொடை பிரதேசத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் 75,000 ரூபாய் பணத்தை திருடி அப்பணத்தில் மூன்று கையடக்கக் தொலைபேசிகள் மற்றும் அதற்குரிய துணைப்பாகங்களையும் கொள்வனவு செய்திருந்த நிலையில் அலவத்துகொடைபொலிஸார் அவற்றை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபரான சிறுவனையும் கைது செய்துள்ளனர்.
அலவத்துகொடை பிரதேசத்தில் வீடு ஒன்றில் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த மேற்படி 75,000 ரூபாய் பணத்தை திருடியே கையடக்க தொலைபேசிகளும் உதிரிப்பாகங்களும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
அலவத்தகொடை எல்லேகடே பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு அடிக்கடி வந்து செல்லும் 15 வயதுடைய இச் சிறுவன் வழமை போல் சம்பவ தினமும் வந்துள்ளதுடன் அதன் போதேமேற்படி வீட்டில் எவரும் இல்லாத நிலையில் வீட்டுக்குள் சென்று 75,000 ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய அலவத்துகொடை பொலிஸார் குறித்த சிறுவனை கைது செய்துள்ளதுடன் அப் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட மூன்று கையடக்க தொலைபேசிகளையும் உதிரிப்பாகங்களையும் மிகுதிப் பணம் ரூபா 30,900 யும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 15 வயதுடைய சிறுவனை கண்டி நீதவான் முன் ஆஜர்செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM