பிரேசிலுக்கான முன்னாள் இலங்கை தூது வர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தொடர்பாக முறையான விசாரணை ஒன்றை ஆரம்பித்தால் அதுதொடர்பாக சாட்சியாக முன்வந்து நீண்ட விளக்கத்தை அளிப்பேன். அவரது செயற்பாடுகளுக்கு அன்றிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் ஆட்சியாளரின் ஆசிர்வாதம் இருந்தமைக்கு என்னிடம் தகவல் இருக்கின்றது என பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.
கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவிந்திர விஜேகுணவர்தன மற்றும் புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சின்னையா ஆகியோரை நேற்று வெள்ளிக்கிழமை அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
எனக்கு பின்னர் இராணுவ தளபதியாக ஜகத் ஜயசூரிய நியமிக்கப்படுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. அவர் அந்த பதவிக்கு பொருத்தமானவர் அல்ல. அவரை தளபதியாக்க வேண்டாம் என மஹிந்த ராஜபக்ஷ்விடம் தெரிவித்தேன். பல சிரேஷ்ட அதிகாரிகள் இருக்கும் நிலையிலேயே அவர் இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார். மஹிந்த ராஜபக்ஷவும் கோத்தபாய ராஜபக்ஷவும் அவர்களின் தேவைக்கே அவரை தளபதியாக்கினார்கள். அதன் பெறுபேறாகவே என்னை இழுத்துக்கொண்டு சிறையிலடைக்க அவர் தலைமைத்துவம் வகித்தார்.
வவுனியாவில் கட்டளைத்தளபதியாக ஜகத் ஜயசூரிய செயற்பட்டார். ஆனால் அவர் யுத்த களத்தில் ஈடுபடவில்லை. இராணுவத்துக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதே அவரின் பொறுப்பாக இருந்தது. அந்த காலப்பகுதியில் அவர் சில குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக எனக்கு தகவல் கிடைத்தது. அதாவது, யுத்தத்தின்போது கைதுசெய்யப்படுட்டு அவருக்கு கீழ் இருப்பவர்களுக்கு எதிராக குற்றம் செய்வதாக தெரிவிக்கப்பட்டது .
அத்துடன் அவர் இராணுவ தளபதியான பின்னரும் அந்த குற்றச்செயற்பாட்டை தொடர்ந்து மேற்கொண்டார் என்றே நான் நினைக்கின்றேன். அவரது குற்றங்கள் தொடர்பாக என்னிடம் தகவல்கள் இருக்கின்றன. முறையான விசாரணை ஒன்றை ஆரம்பித்தால் அப்போது அதுதொடர்பாக சாட்சியாக முன்வந்து நீண்ட விளக்கத்தை அளிப்பேன்.
அதனால் ஜகத் ஜயசூரிய என்னிடமிருந்து இவ்வாறான பதிலை எதிர்பார்த்திருக்கமாட்டார். அவர் குற்றம் செய்திருந்தமையை நான் அறிந்திருந்தேன். இது தொடர்பாக விசாரணை ஒன்றை நடத்த ஆரம்பித்தேன். அதன் முதற் கட்டமாக அவரது பிரதான உதவியாளராக இருந்த லெப்டினன் ஒருவரை கைதுசெய்தேன். அந்த விசாரணைகளை ஆரம்பிக்கும்போது என்னை இராணுவ தளபதியில் இருந்து நீக்கினார்கள்.
எனவே ஜகத் ஜயசூரியவின் குற்றங்களுக்கு அன்றிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் ஆட்சியாளரின் ஆசிர்வாதம் கிடைத்தமைக்கு என்னிடம் தகவல் இருக்கின்றது. அதனால் குற்றமிழைத்த இராணுவ வீரர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதன் மூலம் 2இலட்சம் இராணுவ வீரர்களின் நற்பெயரை பாதுகாத்துக்கொள்ளலாம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM