இலங்கை அணிக்கு எதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில இந்திய அணியின் முன்னாள் தலைவரும் விக்கெட் காப்பாளருமான மகேந்திர சிங் டோனி பல சாதனைகளுக்கு சொந்தக்காரனாகியுள்ளார்.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 4 ஆவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
நேற்றைய போட்டி டோனியில் 300 ஆவது ஒருநாள் போட்டியாகும். இப் போட்டியில் மகேந்திர சிங் டோனி நிகழ்த்திய சாதனைகள் வருமாறு,
ஒட்டுமொத்தமாக அதிக போட்டிகளில் விக்கெட் காப்பாளராக விளையாடிய வீரராக டோனி திகழ்கிறார். இந்திய அணியின் டோனி 467 போட்டிகள் விளையாடியுள்ளதுடன் தென்னாபிரிக்காவின் பௌச்சர் 466 போட்டிகளிலும் சங்கக்கார 464 போட்களிலும் விக்கெட் காப்பாளராக கடமையாற்றியுள்ளனர்.
இதேவேளை, அதிகமுறை ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிகளில் ஆட்டமிழக்காது இருந்த வீரர் என்ற பெருமையையும் இப் போட்டியில் பெற்றுள்ளார் டோனி.
இதிலும் இந்திய அணி வென்ற பெரும்பாலான போட்டிகளிலேயே டோனி ஆட்டமிழக்காது இருந்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு மட்டும் ஒருநாள் போட்டிகளில் டோனி 500 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
அனைத்து விதமான போட்டிகளிலும் விக்கெட் காப்பாளராக எதிரணியின் அதிக ஆட்டமிழப்புக்களை ஏற்படுத்தியவர் என்ற பெருமையையும் டோனி பெற்றுள்ளார். அந்தவகையில் மொத்தமாக 737 ஆட்டமிழப்புக்களை ஏற்படுத்தியுள்ளார்.
இதேவேளை, 300 ஆவது போட்டியில் விளையாடிய 6 ஆவது இந்தியா வீரராக டோனி இடம்பிடித்துள்ளார்.
இதுவரை 99 முறை ஸ்டொம் முறையில் எதிரணி வீரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ள டோனி ஒரு ஸ்டெம்பிங் செய்தால், ஒருநாள் போட்டிகளில் 100 ஆவது ஸ்டெம்பிங் செய்து சாதனை படைப்பார்.
நேற்றைய போட்டியுடன் சேர்த்து ஒரு நாள் போட்டியில் 73 முறை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து ஒருநாள் போட்டியில் அதிக முறை ஆட்டமிழக்காமல் இருந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் டோனி.
இதேவேளை, ஒருநாள் போட்டி, இருபதுக்கு - 20 போட்டி மற்றும் சாம்பியன்ஸ் கிண்ணம் என மூன்று வகையான உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அணித் தலைவர் என்ற பெருமையையும் டோனி படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM