இலங்கை கிரிக்கெட் துறையின் வீழ்ச்சிக்கு வீரர்கள் காரணமல்ல. கிரிக்கெட் நிர்வாகமே காரணமாகவுள்ளது. எனவே அது தொடர்பில் பாராளுமன்றில் விவாதம் நடத்துமாறு கூட்டு எதிர்க்கட்சி சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளது. அத்துடன் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உடனடியாக தனது பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பொரளையிலுள்ள என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகை யில்,
இலங்கை கிரிக்கெட் தொடர்பில் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க அரசாங்கத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். எனவே அது தொடர்பில் இருபத்து நான்கு மணி நேரத்தில் மக்களை தெளிவுறுத்துமாறு அர சாங்கத்திடம் நாம் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
எனினும் இரு வாரங்கள் கடந்துள்ள நிலையிலும் அது தொடர்பில் அரசாங்கம் எதுவித அறிவித்தல்களும் விடுக்கவில்லை. மேலும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவிற் கும் விளையாட்டுத்துறை அமைச்சருக்குமிடையில் அமைச்சரவையில் பிணக்கு ஏற் பட்டுள்ளதாக அறியமுடிகிறது. எனவே இது மிகவும் பாரதூரமான விடயமாகும். ஆகவே உரிய விசாரணை நடத்தி மக்களைத் தெளிவுறுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் கிரிக்கெட் தரவரிசையில் இல ங்கை அணி தற்போது பின்வரிசைக்குச் சென்றுள்ளது. வீரர்கள் அடிக்கடி மாற்றப்படுகின்றனர். தெரிவுக்குழு இராஜினாமாச் செய்கிறது. இவ்வாறான நிலையில் ஆயிரக்கணக்கான பொலிஸாரை பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தி போட்டி நடத்தப்படுகிறது.
ஆகவே இலங்கை கிரிக்கெட் துறைக்குள் நுழைந்துள்ள அரசியலை இல்லாமலாக்க வேண்டும். அத்துடன் கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவின் உறவினர்களுக்கு விளையாட்டு தொடர்பில் சூதாட்டம் நடத்தும் நிறுவனங்கள் உள்ளன. எனவே அவர் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அவர் அது தொடர்பில் மக்களை தெளிவுறுத்த வேண்டும். அல்லாதுபோனால் அவர் தற்காலிகமாகவாவது கிரிக்கெட் சபையின் தலைமைப்பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வேண்டும்.
மேலும் அரசியல் உள்நுழைந்திருப்பதனால் வீரர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் எப்போதுமில்லாதவாறு தற்போது ரசிகர்கள் கிரிக்கெட் அணிக்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கின்றனர். ஆகவே கிரிக்கெட் வீரர்களுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டாம் என இரசிகர்களிடம் கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் இந்நிலைக்கு வீரர்கள் கார ணமல்ல. கிரிக்கெட் நிர்வாகமே கார ணமாகும். எனவே இலங்கை கிரிக்கெட் துறையின் வீழ்ச்சி தொடர்பில் பாராளு மன்றில் விவாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கூட்டு எதிர்க்கட்சி சபாநாய கரிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ள தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM