அமெரிக்காவை தாக்கிய ஹார்வி சூறாவளியால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஹுஸ்டன் நகருக்கு அண்மையிலுள்ள இரசாயனத் தொழிற்சாலையில் வெடிப்புகள் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குரொஸ்பி பிராந்தியத்திலுள்ள அர்கெமா இரசாயனத் தொழிற்சாலையில் இரு வெடிப்புகளையடுத்து கரும் புகை வெளிப்பட்ட வண்ணம் உள்ளதாக கூறப்படுகிறது. ஹார்வி சூறாவளியையடுத்து அந்த இரசாயனத் தொழிற்சாலையிலுள்ள இரசாயன உள்ளடக்கங்களை குளிர்விப்பதற்கு தேவையான குளிரூட்டல் வசதி செயற்படத் தவறியதையடுத்து அதிக வெப்பம் காரணமாக இந்த வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தத் தொழிற்சாலையில் வெடிப்பு இடம்பெறுவதைத் தவிர்க்க வேறு வழி கிடையாது என அந்த தொழிற்சாலை நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இதனையடுத்து அந்தத் தொழிற்சாலையைச் சூழ்ந்து 1.5 மைல் தூரம் வரையுள்ள பிராந்தியங்களில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.
அந்தத் தளத்திலிருந்த தொழிலாளர்கள் கடந்த செவ்வாய்க்கிழமையே வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெடிப்புகளையடுத்து பாரிய தீ ஏற்பட்டு பெருமளவு நச்சுப் புகை வெளியேறும் அபாயம் உள்ளதால் மேற்படி தொழிற்சாலைக்கு அருகிலுள்ள பிராந்தியங்களுக்கு மேலாக விமானங்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அர்கெமா இரசாயனத் தொழிற்சாலையிலான உற்பத்திகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளன.
ஹார்வி புயலையடுத்து இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தில் சிக்கி குறைந்தது 33 பேர் பலியாகியுள்ளதாக அமெரிக்க தேசிய காலநிலை சேவைகள் கூறுகிறது. அமெரிக்க கென்துக்கி மற்றும் லூஸியானா மாநிலங்களில் 3 நாட்களாக அடை மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஹுஸ்டன் பிராந்தியத்திலுள்ள பிரதான எண்ணெய் விநியோகக் குழாய் மூடப்பட்டுள்ளதால் அமெரிக்க சக்திவள விநியோகங்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் மீட்புப் பணியாளர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை கண்டுபிடித்து மீட்கும் முகமாக வீடு வீடாக தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM