உள்ளூராட்சி மன்றத் தேர்தல் புதிய தேர்தல் முறையின் படி எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பப் பகுதியில் அல்லது ஜனவரி மாத முதல் பகுதியில் நடைபெறவுள்ள நிலையில் பிரதான கட்சிகள் தேர்தலுக்கு தயாராகும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
மிக முக்கியமாக சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி, மற்றும் மஹிந்த தரப்பினரின் சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
அதாவது தேர்தலுக்கு வேட்பாளர்களை தெரிவுசெய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளதுடன் பிரசாரப்பணிகளுக்கான செயற்பாடுகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொகுதி, பிரதேச வாரி ஆகிய இரண்டு முறைமைகளைக் கொண்ட கலப்பு முறைமையில் நடைபெறவுள்ளது.
எனவே தொகுதி முறைமையின் படி வேட்பாளர்களை தெரிவு செய்வதில் பிரதான கட்சிகள் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன. மேலும் மக்கள் விடுதலை முன்னணி தமிழ் முற்போக்கு முன்னணி, தமிழ் பேசும் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை தெரிவு செய்வதில் ஈடுபட்டு வருகின்றன.
பெரும்பாலும் இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலானது சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கியதேசியக்கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளுக்கிடையிலான மும்முனைப்போட்டிக்கு உட்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM