எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் விவகாரம் சூடுபிடிக்கவுள்ளது. சர்வதேச நாடுகள் உள்ளிட்ட அமைப்புக்கள் இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்ப உள்ளநிலையிலேயே இலங்கை விவகாரம் 37 ஆவது கூட்டத் தொடரில் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான விவகாரம் விரிவாக ஆராயப்படவுள்ளது. இதன்போது 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான ஜெனிவா பிரேரணை எவ்வாறு அமுல்படுத்தப்படுகின்றது என்பது குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.
அதேபோன்று ஜெனிவா பிரேரணை எவ்வாறு அமுல்படுத்தப்படுகின்றது என்பது தொடர்பில் இலங்கையும் அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளது.
இந்நிலையில் சர்வதேச அமைப்புக்கள் மற்றும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் உறுப்புநாடுகள் 37 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஜெனிவா பிரேரணை அமுல்படுத்துவதில் உள்ள தாமதம், பொறுப்புக்கூறலுக்கான நீதிப் பொறிமுறை இதுவரை தயாரிக்கப்படாமை, காணாமல் போனோர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து சர்வதேசம் இலங்கையிடம் கேள்வி எழுப்ப உள்ளது.
இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினர் இந்தக் கூட்டத் தொடரில் பங்கேற்று பதிலளிக்க உள்ளனர். முக்கியமாக முதல் மூன்று நாட்களில் இலங்கை அரசாங்கம் சார்பாக வெளிவிவகார அமைச்சர் ஜெனிவா அமர்வில் உரையாற்றவிருக்கிறார். அதேபோன்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்தக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
இதன்போது வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினர் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைனையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதன்போது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதில் காணப்படும் சவால்கள் தொடர்பில் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என தெரியவருகிறது.
2015 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைப்பேரவையில் இலங்கை தொடர்பாக ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டது. 2015 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டுவரை குறித்த பிரேரணை முழுமையாக நிறைவேற்றப்படாததால் 2019 ஆம் ஆண்டுவரை மேலதிக இரண்டுவருட கால அவகாசம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு வருடகால அவகாசத்தில் இலங்கை எவ்வாறு பிரேரணையை அமுல்படுத்துகிறது என்பது தொடர்பிலேயே 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் ஆராயப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM