கையெழுத்திட்டார் சபாநாயகர்.!

Published By: Robert

31 Aug, 2017 | 03:07 PM
image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலத்தில், இன்று காலை சபாநாயகர் கரு ஜெயசூரிய கையெழுத்திட்டுள்ளார். 

இந்தச் சட்­ட­மூ­லத்தின் பிர­காரம் உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­த­லா­னது கலப்பு முறையில் அதா­வது, 60 வீதம் தொகு­தி­வாரி முறை­யிலும் 40 வீதம் விகி­தா­சார முறை­யிலும்  நடை­பெ­ற­வுள்­ள­தோடு பெண்­க­ளுக்கு 25வீதம் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் உள்­ளு­ராட்சி மன்­றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்­ச­ராக இருந்த ஏ.எல்.எம்.அதா­வுல்­லா­வினால் உள்­ளு­ராட்சி அதி­கார விசேட ஒழுங்­குகள் சட்டம் மற்றும் உள்­ளு­ராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டம் ஆகிய உத்­தேச பிரே­ர­ணைகள் சமர்ப்­பிக்­கப்­பட்டு வாக்­கெ­டுப்­பின்றி நிறை­வேற்­றப்­பட்­டிருந்தது.

எனினும் 2012ஆம் ஆண்டு அப்­போ­தைய பொரு­ளா­தார அபிவிருத்தி அமைச்­ச­ராக இருந்த பஷில் ராஜ­ப­க்ஷவின் தலை­யீ­டு­க­ளுடன் மேற்­கொள்­ளப்­பட்ட எல்லை நிர்­ணயம் சிறு­பான்மை சமூ­கங்­களின் பிர­தி­நி­தித்­து­வங்­களைக் குறைக்கும் வகையில் அது அமைந்­த­தாக விமர்­ச­னங்கள் எழுந்த நிலையில், தற்­போ­தைய தேசிய அர­சாங்கம் ஆட்­சிப்­பீடம் ஏறி­யதும் மீண்டும் எல்லை நிர்­ணயக் குழு  நிய­மிக்­கப்­பட்­டது.

அக்­கு­ழு­வா­னது எல்லை நிர்­ண­யத்­தினை வகுப்­ப­தற்­கான பணியினை ஒரு­வ­ரு­ட­கா­ல­மாக மேற்­கொண்டு கடந்த டிசம்பர் மாதம் அமைச்சர் பைசர் முஸ்­த­பா­விடம் எல்லை நிர்­ணய அறிக்­கையைச் சமர்ப்­பித்­தி­ருந்­தது. ஏனினும் தொடர்ச்­சி­யாக இழு­ப­றிகள் இடம்­பெற்று வந்­தன.

குறிப்­பாக தொகு­தி­வாரி முறைமை, விகி­தா­சார முறைமை ஆகி­ய­வற்­றுக்­கான சத­வீ­தங்கள்,பெண்­க­ளுக்­கான ஒதுக்­கீட்டுச் சத­வீ­தங்கள் குறித்து தொடர்ந்தும் கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்று வந்­தி­ருந்­தன.

அண்­மையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் அர­சியல் கட்­சித்­த­லை­வர்­க­ளுக்கும் இடையில் நடை­பெற்ற சந்­திப்­பின்­போது குறிப்­பாக சிறு,சிறு­பான்மை அர­சியல் கட்­சி­க­ளினால் முன்­வைக்­கப்­பட்ட நிபந்­த­னைகள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­தை­ய­டுத்து அனைத்து தரப்­புக்­க­ளுக்­கி­டை­யிலும் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டி­ருந்­தது. இவ்­வ­றான நிலை­யி­லேயே மேற்குறித்த சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவான கூட்டு எதிர்க்கட்சி உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துமாறு தொடர்ச்சியாக தேசிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50