இலங்கை அணி கடந்த போட்டிகளில் அடைந்த தோல்விகள் குறித்தும் அப் போட்டிகளில் தலைமையேற்ற தலைவர்கள் குறித்தும் எந்த சிந்தனையும் இல்லை. நடைபெறவுள்ள இன்றைய போட்டிகுறித்தே அனைத்துக் கவனமும் இருக்கிறது என்று இலங்கை அணியின் புதிய தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3–0 என்ற கணக்கில் ஏற்கனவே இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில் இன்று நான்காவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.
இந்திய அணியின் வெற்றி இந்த ஆட்டத்திலும் நீடிக்குமா? அல்லது மாலிங்க தலைமையிலான இளம் இலங்கை அணி வெற்றி பெற்று தமக்கு விருந்தளிக்குமாவென இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் ஏங்குகின்றனர்.
இலங்கை அணியின் தொடர் தோல்விகளில் வெறுப்படைந்துள்ள இலங்கை ரசிகர்கள் தம்புள்ளையில் இடம்பெற்ற போட்டியிலும் கண்டி பல்லேகலயில் இடம்பெற்ற போட்டியிலும் தமது வெறுப்பை காண்பித்திருந்தனர்.
இந்நிலையில் இன்றைய போட்டி இலங்கை ரசிகர்களின் ஏக்கங்களின் மத்தியிலும் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியிலும் கொழும்பில் இடம்பெறவுள்ளது.
இந்தப் போட்டியிலும் இந்திய அணி வென்று 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் ஆர்வத்துடன் இந்திய அணி உள்ளது. ஆனாலும் லசித் மாலிங்க தலைமையிலான இலங்கை அணி எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்திற்கு நேரடியாக தகுதிபெற வேண்டும் என்ற முடிவில் இருக்கிறது.
இந்திய அணி தொடரை வென்று விட்டதால் விளையாடாத வீரர்களுக்கு 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று இந்திய அணித் தலைவர் கோலி ஏற்கனவே தெரிவித்திருந்தார். அந்தவகையில் இந்திய அணியில் இன்றைய போட் டியில் புதுமுக வீரர்கள் களமிறங்க வாய்ப்புள்ளது.
உபுல் தரங்கவிற்கு ஐ.சி.சி. விதித்த தடையினால் தலைவர் பொறுப்பை ஏற்ற சாமர கபுகெதரவும் காயத்திற்குள்ளான நிலையில் தலைவர் பதவி மலிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை சாமர கபுகெதர, குணதிலக்க, சந்திமால் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். அதிரடி வீரர் டில்ஷான் முனவீர அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இன்றைய களநிலையை ஆராய்ந்தே ஆடும் பதினொருவர் கொண்ட இலங்கை அணி தெரிவு செய்யப்படவுள்ளது.
அநேகமாக திரிமான்னவும் டில்ஷான் முனவீரவும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்க வாய்ப்புள்ளது.
இன்றையய போட்டியை பொறுத்திருந்து பார்ப்போம் லசித் மாலிங்க தனது அனுபவத்தை பயன்படுத்திய இளம் வீரர்களை வழிப்படுத்தி, தொடர் தோல்வியால் வெறுப்படைந்துள்ள இலங்கை ரசிகர்களுக்கு விருந்தளிப்பாராவென ?
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM