எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குறுந்துகஹ ஹெதப்ம உப தபால் நிலையத்தில் தீ பரவலின் பின்னர் சடலமாக மீட்கப்பட்ட பெண் தபால் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய 49 வயதான காஞ்சனமாலா என்பவரின் மரணத்தில் பல மர்மங்கள் நிலவுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் எல்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் அது தொடர்பில் விஷேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேசத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விசேடமாக குறித்த பெண் தபால் பொறுப்பதிகாரி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டுள்ளாரா என்ற கோணத்தில் கிடைக்கப்பெற்றுள்ள சாட்சியங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த தபால் பொறுப்பதிகாரியின் சடலம் மீது எல்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனைகளின் பின்னர் திறந்த தீர்ப்பொன்று வழங்கப்பட்டு சடலத்தின் பாகங்கள் மேலதிக ஆய்வுக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக அவரது உடலில் விஷத்தன்மை காணப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனைகளின் போது தெரியவந்துள்ள நிலையில், தீக்கிரையான தபாலகத்தில் இருந்து விஷ போத்தல் ஒன்றும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த கட்டிடத்துக்குள் இருந்து மண்ணெண்ணெய் இல்லாத குப்பி விளக்கொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், விஷம் அருந்திய பின்னர் குறித்த பெண் தீ பரவலை ஏற்படுத்தி தற்கொலை செய்துகொண்டாரா என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எனினும் பிரதேச மக்கள் சிலரின் சாட்சியங்கள் இது கொலை சம்பவமாக இருக்கலாம் எனும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. தபாலகத்தின் பிரதான வாயிலில் இரு பூட்டுக்கள் உடைக்கப் பட்டிருந்ததாகவும், தபாலக இலாச்சியும் திறந்த நிலையில் இருந்ததாகவும் பொது மக்கள் சிலர் கூறியுள்ள நிலையில், இந்த தீ பரவலும், பெண் பொறுப்பதிகாரியின் மரணமும் கொலையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன் வாயிலின் பூட்டுகள் உடைக்கப்பட்டுள்ளதை அவதானித்துள்ள நபரொருவர் உடனடியாக தபாலகத்தில் இருந்து 300 மீற்றர் தூரத்தில் உள்ள, உயிரிழந்த தபால் பொறுப்பதிகாரியின் வீட்டுக்கு விடயத்தை கூற சென்றுள்ளார். இதன் போது அவர் தபாலகம் சென்றுவிட்டதாக கூறவே மீள அங்கு சென்று பார்த்த போது புகை எழுவது கண்டு பிரதேச மக்கள் தீ பரவல் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இந்நிலையிலேயே தீயை அணைத்த பின்னர் சடலமாக குறித்த பெண் மீட்கப்பட்டுள்ளார். அந்த தபால் பொறுப்பதிகாரி, பல தடவைகள் சிறந்த உப தபால் பொறுப்பதிகாரியாக விருது வென்றவர் என தெரியவருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM