சசிகலா மற்றும் தினகரனை அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைப்பது உள்ளிட்ட நான்கு தீர்மானங்கள் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று அ.தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் என சுமார் 200 பேர் பங்குபற்றினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியமாக நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு,
• விரைவில் பொதுக்குழுவையும், செயற்குழுவையும் கூட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் முடிவு.
• சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க முடிவு.
• நிர்வாகிகளை நீக்கியும், புதிய நிர்வாகிகளை நியமித்தும் சசிகலா, தினகரன் அறிவித்த உத்தரவுகள் அனைத்தும் செல்லாது.
• அதிமுகவுக்கு சொந்தமான ஊடகங்களை (நமது எம்.ஜி.ஆர், ஜெயா டிவி) கைப்பற்றவும் நடவடிக்கை.
இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வம் ஆதரவு நிர்வாகிகளை நீக்கி தினகரன் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், சசிகலா மற்றும் தினகரனை ஒதுக்கி வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM