ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வும் ஒப்பந்தம் அடுத்த மாதம் நிறைவடையவுள்ளன. இதன்படி டிசம்பர் மாதம் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு கைச்சாத்திடப்படும் என மின்வலு மற்றும் மீள்புத்தாக்க பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்தார்.
தேசிய அரசாங்கத்தின் ஒப்பந்தம் அடுத்த மாதம் நிறைவடையவுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு குறித்து வினவிய போதே பிரதி அமைச்சர் வீரகேசரி இணையத்தளத்திற்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ சுதந்திரக் கட்சியும் இலங்கையின் இரு பிரதான கட்சிகளாகும். இரு கட்சிகளும் நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளன. இதன்போது இரு பிரதான கட்சிகளுக்கிடையில் பல பரஸ்பர கொள்கையும் நிலவுகின்றன. கருத்து வேறுபாடுகளும் நிலவின.
முன்னைய தேர்தல்களின் போது இரு பிரதான கட்சிகளும் முரண்பட்டு கொண்டும் தாக்குதல் நடத்தி கொண்டும் இருந்தன. இதனால் பல உயிர்கள் பிரிந்தன. உடைமைகள் பல அழிந்தன.
எனினும் வரலாற்றில் முதற்தடவையாக இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன. நாட்டின் பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடனே நாம் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை நிறுவினோம்.
இந்த ஒப்பந்தம் நிறைவடைந்தமை தொடர்பில் பலர் எத்தகைய கருத்துகளை கூறினாலும் தேசிய அரசாங்கம் தொடர்ந்து பயணிக்கும். 2020 ஆம் ஆண்டு வரைக்கும் ஆட்சி தொடர்ந்து பயணிக்கும் என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM