அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மூன்று அமைச்சர்களுக்கு எதிராக ஐக் கிய தேசியக் கட்சியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
அமைச்சர்களான டிலான் பெரேரா, சுசில் பிரேம் ஜயந்த மற்றும் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன ஆகிய மூவருக்கெதிராகவே இவ்வாறு ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மூன்று அமைச்சர்களும் அரசாங் கத்தில் இருந்துகொண்டே அரசாங்கத் தின் மீதும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அமைச்சர்கள் மீதும் பகிரங்கமாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவருவதாகவும் இதனால் அரசாங்கத் தின் மீது மக்கள் அதிருப்தி கொள்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறு குறித்த மூன்றுஅமைச்சர்களுக்கு எதிராக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளை அடுத்தே தாம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சினர் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் குறித்த மூன்று அமைச்சர்களும் அரசாங்கத்தையும் குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்து வருவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்நிலையிலேயே தற்போது அவர்களுக்கு எதிராக ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM