கிளிநொச்சி, பொதுச்சந்தை நீண்ட காலமாக துர்நாற்றம் வீசி வருவதாகவும், இதனால் வர்த்தகர்கள், பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்வதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த பொதுச் சந்தையில் அமைந்துள்ள மலசலகூடம், அதை அண்மித்த பகுதிகள் இவ்வாறு துர்நாற்றத்துடன் காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் புதிதாக மலசல கூடம் நிர்ணிக்கப்பட்டுள்ள போதிலும், அது பாவனைக்கு கையளிக்கப்படவில்லை எனவும், 380 வர்த்தகர்கள் மற்றும் அங்கு வருகைதரும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் சுகாதார சிற்றூழியர்கள் சேவையில் ஈடுபடுகின்ற போதிலும், துர்நாற்றத்திலிருந்து பொதுச்சந்தை விடுபடவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் தொற்று நோய்களிற்கும், சுவாச நோய்களிற்கும் மக்கள் ஆளாகும் முன்னர், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கரைச்சி பிரதேச சபையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM