ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியாகும் பட்சத்தில் அவருக்கு கட்சியின் தலைமைப்பதவி வழங்கப்பட வேண்டும் என்ற திருத்தத்தினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே நடைமுறைப்படுத்தினார்.
ஆனால் இன்று அவரின் செயற்பாடுகள் அந்த நடைமுறைக்கு மாறாகவே அமைந்துள்ளதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
பத்தரமுல்லை செத்சிரியாயவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்களாக இருந்த பலர் பல்வேறு சந்தர்ப்பங்களில் கட்சியிலிருந்து விலகிச் சென்றுள்ளார்கள். குறிப்பாக கட்சியின் செயலாளராக இருந்த மைத்திரிபால சேனாநாயக்க, சூரியராச்சி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அனுர பண்டாரநாயக்க உள்ளிட்டோர் கட்சியை விட்டுச் சென்றிருந்தார்கள்.
அதன் பின்னர் அவர்கள் அனைவரும் கட்சியின் தலைமைத்துவத்தினால் விலக்கப்பட்டு மீண்டும் கட்சிக்குள் இணைத்துக்கொள்ளப்பட்டார்கள். அந்த வரிசையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் உள்ளார். அவ்வாறான முக்கியஸ்தர்களின் விலகல் என்ற சவால்களையும் கடந்துசென்றுதான் நாம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை வெற்றிபெறவைத்து கட்சியை மீட்டெடுத்தோம்.
அந்த வெற்றியின் பலனாகத்தான் இன்றும் ஜனாதிபதி பதவி சுதந்திர கட்சியினர் வசமாகவே உள்ளது. அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது பொது வேட்பாளராக போட்டியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர் அன்னச் சின்னத்தில் போட்டியிட்டதால் சுயேட்சையா செயற்படுவார் என்று கருதினோம்.
ஆனால் அமைச்சர் மஹிந்த அமரவீர ஊடாக புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தார் அப்போது கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் வீட்டில் சந்திப்பை நடத்தினோம்.
அப்போதுதான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தலைமைத்துவத்தை வழங்க இணக்கம் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் அவர் கட்சியின் ஆலோசகராக இருக்கவும் இணக்கம் தெரிவித்தார். கட்சியின் புதிய தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் நடத்தப்பட்ட முதலாவது மாநாட்டில் இருவரும் ஒரேமேடையில் அமர்ந்திருந்தார்கள்.
அவ்வாறான நிலைமைகளை கடந்து வந்துள்ள நிலையில் கட்சியில் ஒரு தரப்பினர் பிரிந்து செல்லும் போதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுடன் ஒருமித்து செயற்பட விரும்புகின்றோம் என்றே பகிரங்கமாக கூறினார்.
இவ்வாறான நிலைமைகளின் பின்னர்தான் தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்சியின் தலைவர் தானே என கூறுகின்றார். எவ்வாறாயினும் சுதந்திர கட்சி அநாவசிய மோதல்களை தவிர்த்து முன்னேற்றம் அடைவதையே நாங்கள் விரும்புகின்றோம். அதனால் நாடுதான் பயனடையும் என்பதை சகலரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
அதேநேரம் கட்சியின் அங்கத்தவர் ஒருவர் ஜனாதிபதியாகும் பட்சத்தில் அவர் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்பார். அதுவரையில் தலைவராக இருந்தவர் கட்சியின் ஆலோசகர் ஆவார் என்ற திருத்தத்தினையும் கட்சியின் சட்டதிட்டங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே கொண்டுவந்திருந்தார் என்பதையும் அவர் மறந்துவிடக்கூடாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM