தேசிய அரசாங்கத்தை தொடர்வதா? இல்லையா? என்பதை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம்திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானிக்கும். இந்த நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதியும் இருக்கின்றார் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்து இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் திருப்தி அடைய முடியுமா? என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
டிலான் பெரேரா இந்த விடயம் தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துவிட்டபோதிலும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியே நாம் இது தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுக்கவுள்ளோம். இந்த நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இருக்கின்றார்.
குறிப்பாக டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி ஆகும் போது கடந்த இரண்டு வருடங்களில் நாம் எதனை சாதித்தோம் என்பதை மீளாய்வு செய்வோம். அதன் பின்னர் தேசிய அரசாங்கத்தை நீடிப்பதா? இல்லையா? என்பதை தீர்மானிப்போம். விசேடமாக தற்போதைய நிலைமையில் எங்களால் சில விடயங்களில் திருப்தியடைய முடியுமாக உள்ளது. அதாவது உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஒரு மிகப்பெரிய விடயமாகும். தற்போது தேர்தலை நடத்தமுடியும். அதேபோன்று அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.
அதாவது ஆகஸ்ட் மாதம் 31 ஆம்திகதிக்கு முன்னர் பிரதான கட்சிகள் தமது யோசனைகளை முன்வைக்கவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விரைவாக நல்லது நடக்கும் என நம்புகின்றோம். விசேடமாக தேர்தல் முறை மாற்றம் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பவற்றை விரைவில் எதிர்பார்க்கின்றோம். ஒருசில விடயங்களில் எங்களுக்கு திருப்தி இல்லாத நிலை காணப்படுகின்றது. குறிப்பாக ஊழல் மோசடி விவகாரங்களில் நாம் திருப்தியடைய முடியாது. ஆனால் அரசியலமைப்பு உருவாக்கல் விடயத்தில் நல்ல விடயங்கள் இடம்பெற்றுள்ளன.
எனவே டிசம்பர் மாதம் 31 ஆம்திகதி ஆகும் போது இந்த விடயங்களில் சிறந்ததொரு பெறுபேறை எதிர்பார்க்கின்றோம். அதன் போது எமக்கு திருப்தி ஏற்படாவிடின் தேசிய அரசாங்கத்தில் நீடிப்பதா இல்லை யா என்பதை தீர்மானிக்கவேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்படுவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM