முல்லைத்தீவு கேப்பாப்புலவில் அமைக்கப்பட்டிருக்கும் படையினரின் கட்டடங்களையும் உபகரணங்களையும் வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு செலவாகும் 148மில்லியன் ரூபாவை செலுத்தி 111 ஏக்கர் விஸ்தீரணமான காணியை விடுவிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. திறைசேரியினால் நிதி விடுவிக்கப்பட்டதும் 111ஏக்கர் காணிகளையும் ஆரம்ப உரித்தாளிகளுக்கு உடனடியாக விடுவிக்க திட்டமிட்டுள்ளோம் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முல்லைத்தீவு கேப்பாப்புலவு கிராமத்தில் பாதுகாப்பு தரப்பினரின் பொறுப்பிலிருந்த காணிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்பு தரப்பு தமது விருப்பத்தை வெளியிட்டதைத்தொடர்ந்து 243 ஏக்கர் தனியார் காணிகள் எவ்வித நிதியும் பெறப்படாத நிலையில் உரித்தாளிகளுக்கு விடுவிக்கப்பட்டன. அத்துடன் 5 மில்லியன் ரூபா செலுத்திய பின்னர் கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதி மேலும் 189 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன.
அதேபோன்று கேப்பாப்புலவில் 111 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் இராணுவ முகாம்களை வேறு இடத்துக்கு இடமாற்ற 148 மில்லியன் ரூபா செலுத்தும் பட்சத்தில் அந்த காணிகளை விடுவிக்க இராணுவத்தளபதி இணக்கம் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் பாதுகாப்பு தரப்பினரின் பொறுப்பில் இருந்த குறித்த காணிகளை விடுவித்து அவற்றின் ஆரம்ப உரித்தாளிகளுக்கு வழங்கும் பிரேரணையை அண்மையில் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பித்திருந்தேன்.
அதன் பிரகாரம் பாதுகாப்பு தரப்பு கோரியிருந்த 148 மில்லியன் ரூபாவை செலுத்தி குறித்த காணிகளை விடுவிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. திறைசேரியினால் குறித்த நிதி விடுவிக்கப்பட்டதும் பாதுகாப்பு தரப்புக்கு விடுவிக்கப்பட்டு, 111 ஏக்கர் காணிகளும் ஆரம்ப உரித்தாளிகளுக்கு உடனடியாக விடுவிக்க திட்டமிட்டுள்ளோம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM