இலங்கையுடன் தொழில்நுட்ப ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள தாம் தயாரா இருப்பதாகவும் அதன் ஊடாக இலங்கைக்கு தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொலைத்தொடர்பு துறையில் புதிய அம்சங்களை அறிமுகப் படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் ஜோன் பிலிப் கோடிஸ் தெரிவித்துள்ளார்.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் ஜோன் பிலிப் கோடிஸுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் சுவிட்ஸர்லாந்தின் டலோஸ் நகரில் இடம் பெற்றது. இந்த கலந்துரையாடலின் போதே ஜோன் பிலிப் கோடிஸ் மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்த உடன்படிக்கையின் ஊடாக இலங்கையில் புதிய தலைமுறையிலான தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தவும் தகவல் தொழில்நுட்பம், கல்வி மற்றும் சமூக பாதுகாப்பு துறையில் டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க
எதிர்பார்த்துள்ளோம் இது குறித்து ஆராய்வதற்கு விஷேட நிபுனர் குழு ஒன்றை மிக விரைவில் இலங்கைக்கு அனுப்ப எதிர்பார்த்துள்ளோம்.
தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் மக்களுக்கு நேரடியாக தகவல் தொடர்பாடலை மேற்கொள்ள கூடியதாக உள்ளது. இந்த வசதியை சமூக முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக்கொள்வது தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
விஷேடமாக கல்வி, நிதி மற்றும் சுகாதார சேவையை மேம்படுத்த இந்த இணைப்பை பயன்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM