பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் பதியப்பட்ட 84 வழக்குகள் தொடர்ந்தும் நிலுவையில் உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட 12 பேர் தொடர்பான பொலிஸ் விசாரணை அறிக்கைகளையும் சட்டமா அதிபர் திணைக்களம் பரீட்சித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே குறித்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்போது முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியமை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை தாக்கியமை, தேசத்துக்கு மகுடம் நிகழ்வின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்களை தாக்க முற்பட்டமை, சதித்திட்டம் மேற்கொண்டமை, முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயை கொலை செய்ய சதித்திட்டம் மேற்கொண்டமை, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை கொலை செய்ய முற்பட்டமை, முன்னாள் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்டவர்களை கொலை செய்தமை உள்ளிட்ட வழக்குகள் இடம்பெற்று வருகின்றன.
ஆனாலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் பதியப்பட்ட 84 வழக்குகள் தொடர்ந்தும் நிலுவையில் உள்ளன. மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட 12 பேர் தொடர்பான பொலிஸ் விசாரணை அறிக்கைகளையும் சட்டமா அதிபர் திணைக்களம் பரீட்சித்து வருகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM