ஈரானுக்கு முக்கியத்துவம் மிக்க விஜயத்தை மேற்கொண்டு சென்றுள்ள சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், அந்நாட்டு ஜனாதிபதி ஹஸன் ரோவ்ஹானியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
ஈரானுக்கு எதிரான சர்வதேச தடைகள் நீக்கப்பட்டதையடுத்து அந்நாட்டிற்கு விஜயம் செய்த முதலாவது வெளிநாட்டுத் தலைவர் என்ற பெயரை சீன ஜனாதிபதி பெறுகிறார்.
மேற்படி சந்திப்பின் போது இரு நாட்டுத் தலைவர்களும் பொருளாதாரம் மற்றும் அரசியல் உறவுகள் என்பன குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
600 பில்லியன் அமெரிக்க டொலராக வர்த்தகத்தை ஊக்குவித்தல் உள்ளடங்கலாக 17 உடன்படிக்கைகளில் சீன மற்றும் ஈரானிய ஜனாதிபதிகள் கைச்சாத்திட்டுள்ளனர்.
இரு நாடுகளுக்குமிடையிலான தந்திரோபாய உறவுகள் தொடர்பில் பரந்தளவான உடன்படிக்கையொன்றில் தானும் சீன ஜனாதிபதியும் கைச்சாத்திட்டதாக ரோவ்ஹானி தெரிவித்தார்.
அத்துடன் விஞ்ஞானம், நவீன தொழில்நுட்பம், கலாசாரம், சுற்றுலாத் துறை, பாதுகாப்பு, பாதுகாப்புப் பிரச்சினைகள் மற்றும் மத்திய கிழக்கிலான ஸ்திரத்தன்மையின்மை என்பன குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
சீன ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது ஈரானிய உச்ச நிலைத் தலைவர் ஆயதுல்லாஹ் அலி கமெய்னியையும் சந்தித்து உரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் கடந்த ஒரு தசாப்த காலப் பகுதியில் ஈரானுக்கு விஜயம் செய்த முதலாவது சீன ஜனாதிபதியாக விளங்குகின்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM