நீதி அமைச்சராவிருந்த விஜேதாஸ ராஜபக் ஷவின் பதவி நீக்கத்திற்கு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் விவகாரமே காரணமாகும் என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
தேர்தல்கள் திணைக்களத்திற்கு நேற்று சென்றிருந்த போது ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷவின் பதவியில் நேற்று முதல் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதை சகலரும் அறிவர். அவர் ஊழலில் தொடர்பு பட்டிருந்தார், மோசடி செயற்பாடுகளை முன்னெடுத்தார், அரச சொத்துக்களை சேதம் செய்தார் அல்லது அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பதவி விலக்கப்படவில்லை. 2 காரணங்களே அவரின் பதவி நீக்கத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ளன. முத லில் அவர் மீது எப்போது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். முன்னாள் வெளிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகிய பின்பே முன்வைக்கப்பட்டது.
மேலும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்தும் மேற்படி விவகாரத்தின் பின்பே பேச்சுக்கள் எழுந்தன. முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் விவகாரத்தின் பின்பே நீதி அமைச்சருக்கு அழுத்தம் வரத் தொடங்கியது.
இந்த நாட்டில் தற்போது சட்டத்தின் ஆட்சி இல்லாமையே சகலதுக்கும் காரணமாகின்றது. இதற்கு முன்னர் நீதியரசராக இருந்த மொஹான் பீரிஸையும் தற்போதைய அரசாங்கம் இவ்வாறுதான் விலக்கியது. 43 ஆவது நீதியரசர் ஒருவர் இலங்கையில் இருக்கவில்லை என்றும் கூறினார்கள்.
அதன் பின்னர் சட்டமா அதிபரான யுவஞ்சன் மீது அரசாங்கம் சேறு பூசியதால் அவரும் விலகிச் சென்றார். அவரின் பதவிக்கு அவருக்கு அடுத்த மட்டத்தில் இருப்பவரை விடுத்து மூன்றாம் நிலையில் இருப்பவரை பதவியில் அமர்த்தினார்கள். நள்ளிரவு 12 மணி வரையில் வழக்கு விசாரணை இடம்பெற்றது. சனிக்கிழமையிலும் கூட நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை செய்யப்பட்டது.
அதனால் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து தற்போதாவது மக்கள் கண்விழித்து பார்க்க வேண்டும். அப்போது தான் அரசாங்கம் சதிச் செயற்பாடுகளை முன்னெடுப்பது மக்களுக்கு தெரியவரும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM