பதவி இழந்துள்ள விஜேதாஸ ராஜபக்ஷ மீண்டும் புனர்வாழ்வு பெற்று வரலாம். அமைச்சர் திலக் மாரப்பன அவ்வாறு புனர்வாழ்வு பெற்று வந்தவர் ஆவார் என்று அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனரட்ன தெரிவித்தார்.
நீதியமைச்சர் மாறிவிட்டார் என்பதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளை மாற்ற முடியாது. என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்க்கவேண்டும். அமைச்சர் மாறியுள்ள நிலையில் நல்லது நடக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்:-
கேள்வி: விஜேதாஸ ராஜபக் ஷ விவகாரத் தில் என்னதான் நடக்கின்றது?
பதில்: அது தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார். ஜனாதிபதி உரிய அறிவித்தலை விடுத்திருக்கிறார் என்று நினைக்கின்றேன்.
கேள்வி: அப்படியாயின் புதிய நீதி அமைச்சர் யார்?
பதில்: புதியவர் ஒருவர் வருவார் பொறு த்திருந்து பாருங்கள்.
கேள்வி: அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்பை மீறி கருத்து வெளியிடுகின்றார். அவருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
பதில்: இப்போதுதானே ஆரம்பித்திருக்கிறது. எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படலாம்.
கேள்வி: எவன்காட் விவகாரத்தில் ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்குப் பதிலாக நிதி சுத்திகரிப்பு குற்றச்சாட்டுதான் முன்வைக்கப்பட்டுள்ளது. இது ஏன்?
பதில்: அப்படி ஒரு விடயம் இருக்கிறது. இதுதொடர்பில் பார்க்கவேண்டும். எனக்கும் அவ்வாறு ஒரு பிரச்சினை இருக்கிறது. புதிய நீதியமைச்சர் இந்த விவகாரத்தை மீள்பார்வை செய்வார் என நான் நம்புகிறேன்.
கேள்வி: அமைச்சர் மாறினால் நல்லது நடக்குமா?
பதில்: நல்லது நடக்கலாம்.
கேள்வி: அமைச்சு மாறியுள்ள நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் மாற்றப்படுவார்களா?
பதில்:: இல்லை. அவ்வாறு அதிகாரிகளை மாற்ற முடியாது.
கேள்வி: நீதி அமைச்சிலிருந்து விலகிய பின்னர் விஜேதாஸ ராஜபக் ஷக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா?
பதில்: அதனைப் பார்க்கவேண்டும்.
கேள்வி: திலக் மாரப்பன புனர்வாழ்வு பெற்று மீண்டு வந்திருக்கின் றார். அப்படியாயின் விஜேதாஸ ராஜபக் ஷவும் புனர்வாழ்வு பெற்று மீண்டு வருவாரா?
பதில்: ஆம். விஜேதாஸ ராஜபக் ஷ புனர்வாழ்வு பெற்று மீண்டு வரலாம்.
கேள்வி: ராஜபக் ஷக்களுக்கு எதிராக விசேட நீதிமன்றம் அமைக்கப்படும் என்று கூறினீர்கள். ஆனால் அவ்வாறு முடியாது என சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளதே?
பதில்: ராஜபக் ஷக்களுக்கு எதிராக அல்ல. கடந்த கால ஊழல்களுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தை ட்ரயல் அட்பார் நீதிமன்றமாக மாற்றவே முயற்சிக்கின்றோம்.
கேள்வி: எனினும் சட்டத்தரணிகள் எதிர்க்கின்றனரே?
பதில்: அந்த சட்டத்தரணிகள் எந்தப்பக்கம் உள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியும். இலங்கையில்தான் திருடர்கள் ஆடிக் கொண்டிருக்கின்றனர். மற்றைய நாடுக ளில் திருடர்கள் அச்சத்தில் இருப்பார் கள். இலங்கையில் திருடர்கள் ஆடிக் கொண்டிருக்கின்றனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM