நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் பதவி நீக்கம் தொடர்பான பிரச்சினையானது ஐக்கிய தேசியக்கட்சியின் விவகாரமாகும். அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அதை ஐக்கிய தேசியக்கட்சி பார்த்துக்கொள்ளட்டும் என்று அமைச் சரவைப் பேச்சாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
கேள்வி: விஜயதாஸ ராஜபக்ஷ விவகாரம் தொடர்பில் சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடு என்ன?
பதில்: நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவின் பதவி நீக்கம் தொடர்பான பிரச்சினையானது ஐக்கிய தேசியக்கட்சியின் விவகாரமாகும். அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அதை ஐக்கிய தேசியக்கட்சி பார்த்துக்கொள்ளட்டும்
கேள்வி: எனினும் உங்கள் கட்சியில் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு அமைச்சரவைக் கூட்டுப்பொறுப்பை மீறி கருத்து வெளியிடுகின்றார். அது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
பதில்: அது தொடர்பில் ஆராயவேண்டும். இது தொடர்பில் ஜனாதிபதியும் சுதந்திரக்கட்சியும் முடிவெடுக்கவேண்டும். சிலர் தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடுவார்கள்,. ஆனால் அமைச்சரவைக் கூட்டுப்பொறுப்பை மீறி யாரும் பேசக்கூடாது. தனிப்பட்ட கருத்துக்கள் நிலைப்பாடுகள் இருக்கலாம். ஆனால் கட்சி முடிவெடுத்துவிட்டால் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
கேள்வி: தேசிய அரசாங்கத்தை ஐக்கிய தேசியக்கட்சிதான் நடத்துவதுபோல் தெரிகிறதே? சுத ந்திரக்கட்சி பார்வையாளர்போல் இருப்பதுபோன்று தெரிகின்றதே? என்னதான் நடக்கின்றது?
பதில்: ஐக்கிய தேசியக்கட்சியின் விவகாரத்தை கையில் எடுக்க விரும்பவில்லை. இரண்டு கட்சிகள் இணைந்து நாட்டை ஆட்சி செய்கின்றன. எனவே இங்கு கருத்து முரண்பாடுகள் ஏற்படலாம். ஆனால் தீர்மானங்கள் எடுத்தபின்னர் இணைந்து பயணிக்கவேண்டும். விஜயதாஸ விவகாரத்தில் ஐக்கியதேசியக்கட்சியே தீர்மானம் எடுத்திருக்கிறது. அது அந்தக்கட்சியின் முடிவு, ஜனாதிபதியோ, சுதந்திரக்கட்சியோ இது தொடர்பில் எதுவும் பேசவில்லை.
கேள்வி: உங்கள் கட்சியினர் விஜேதாஸவை சிறந்த அமைச்சர் என்று கூறியிருக்கின்றனர்.?
பதில்: அது அவர்களின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். இங்கு அரசாங்கத்தின் பொதுவிடயங்கள், தனிப்பட்ட விடயங்கள் என பல விடயங்கள் உள்ளன. இவற்றைப் புரிந்துகொண்டுதான் பயணிக்கவேண்டும். கட்சிய என்ற ரீதியிலும் அரசாங்கம் என்ற ரீதியிலும் பயணிக்கவேண்டியுள்ளது.
கேள்வி: பிரதமரை மாற்றும் எண்ணம் சுதந்திரக்கட்சிக்கு உள்ளதா?
பதில்: சிலர் கனவுகாண்கின்றனர். ஆனால் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து ஆட்சி நடத்தினாலும் கட்சிகளில் உள்ள அமைச்சர்களுக்கு அதன் தார்பரியம் புரியவில்லைபோல் தெரிகிறது. ஒருசிலர் என்னையும் கூட விமர்சித்திருந்தனர். இவ்வாறு சேறு பூச முற்படும்போது நாங்களும் பதில் கூறவேண்டி ஏற்படுகின்றது. இப்போது உதாரணமாக கூறுவதென்றால் சைட்டம் தொடர்பில் எங்களுக்கு வேறு நிலைப்பாடு உள்ளது. ஆனால் தேசிய அரசாங்கம் கூட்டுப்பொறுப்பு என வரும்போது நாங்கள் பொதுவான நோக்கத்தில் பயணிக்கின்றோம். இவற்றை வெளியில் சென்று விமர்சித்துக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அது கூடாது.
கேள்வி: அப்படியாயின் 2020 வரை இவ்வாறு சத்தம்போட்டுக்கொண்டு இருக்கப்போகின்றீர்களா?
பதில்: வேறு என்னதான் செய்வது? நான்கறை வருடத்திற்கு பாராளுமன்றத்தை கலைக்க முடியாது. ஐக்கியதேசியக்கட்சியிடம் 106 எம்.பி.க்கள் உள்ளது. அவர்களுக்கு இன்னும் 7 ஆசனம் கிடைத்தால் தனித்து ஆட்சி அமைக்க முடியும். எமக்கு இன்னும் 17 ஆசனங்கள் கிடைத்தால் தனித்த ஆட்சி அமைக்க முடியும். ஆனால் சாத்தியமில்லை. இது மக்களின் தீர்ப்பு, எனவே தேசிய அரசாங்கத்தை அமைத்திருக்கின்றோம். இவ்வாறுதான் பயணிக்கவேண்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM