அமைச்சரவைக் கூட்டுப்பொறுப்பை மீறியதன் காரணமாகவே விஜேதாஸ ராஜபக் ஷவை அமைச்சுப் பொறுப்பிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய தேசியக்கட்சி தீர்மானித்தது என்று அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்;
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியல் தலைவர் என்பதை விட சிறந்த ராஜதந்திரியாக செயற்படுகின்றார். அவர் அடுத்த தேர்தலைப் பார்க்காமல் அடுத்த சந்ததியைப் பார்க்கிறார். 150 ஆசனங்கள் கிடைத்தாலும் தேசிய அரசாங்கம் அமைக்கப்படவேண்டும் என்பது பிரதமரின் எண்ணம். இதனை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
இதேவேளை விஜயதாஸ ராஜபக்ஷ அமைச்சரவைக் கூட்டுப்பொறுப்பை மீறியதன் காரணமாகவே பதவிநீக்கம் செய்யப்படவேண்டும் என நாம் வலியுறுத்தினோம். இது தொடர்பில் எமது செயற்குழுக்கூட்டத்தில் ஆராயப்படட்து.
அப்போது எமது தவிசாளர் தலைமையில் ஒரு குழுவை நியமித்து இது தொடர்பில் ஆராயுமாறு கூறினோம். அதன்போது தனது தவறை திருத்திக் கொள்ள அமைச்சருக்கு சந்தர்ப்பம் இருந்தது. ஆனால் அவர் அதனை செய்யவில்லை. இதனால்தான் நாங்கள் அவரைப் பதவி நீக்கவேண்டும் என கூறினோம்.
கேள்வி: அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறியது காரணமா? அல்லது சட்டமா அதிபர் திணைக்கள விவகாரமா?
பதில்: இல்லை. அம்பாந்தோட்டை துறைமுக விகவாரம் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டுப்பொறுப்பை மீறியதே இதற்கு காரணமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM