சுமணரத்ன தேரர் பொலிஸாருக்கு எதிராக உருவப்பொம்மை எரித்து எதிர்ப்பு

Published By: Digital Desk 7

23 Aug, 2017 | 06:15 PM
image

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனக்கெதிராக  எவ்வித விசாரணையுமின்றி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்தமையைக் கண்டித்து இன்று புதன்கிழமை மங்களராம விகாரையின் விகாரதிபதியான அம்பிட்டிய சுமணரத்ன தேரர்  பொலிஸாருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக பொலிசாரின் உருவப் பொம்மையை அவரது விகாரை பகுதியில் வைத்து தீயிட்டு எரித்து எதிர்ப்பை தெரிவித்தார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கெவிலியாமடு விகாரையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மது போதையில் கடமையில் ஈடுபட்டபோது அவருக்கும் தேரருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினையடுத்து மங்களகம பொலிஸ் நிலைத்திற்கு சென்று தோர்  முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பொலிசாரை கைதுசெய்து சட்டவைத்திய பரிசோதனையில்  மதுபோதையில் இருந்ததாக சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனையடுத்து குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் கடமையில் ஈடுபட்டுவருகின்றார்.

இந்த நிலையில் தேரர் தன்னை அடித்ததாக தேரருக்கு எதிராக குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். 

இதேவேளை  வேறு ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தோர் தன்னை அடித்ததாகவும் வைத்தியசாலையில் தான் அனுமதிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பில் தேரர் தெரிவிக்கையில், 

சம்பவம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது இது தொடர்பாக பொலிசார் வாக்கு மூலம் எதுவும் பெறவில்லை. இதேவேளை அப்பாவி மக்களுக்காக குரல் கொடுத்ததினால் நான் உயிர் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில், எனக்கும் விகாரைக்கும் பாதுகாப்பு கொடுக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களினால் எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதனால் பொலிசார் மீது எவ்விதமான நம்பிக்கையும் இல்லாமல் போயுள்ளதுடன் இது எனக்கு எதிராக பொலிசாரால் சோடிக்கப்பட்ட செயல் எனவும் குறித்த செயலை வன்மையாக கண்டிப்பதுடன் இதற்கு எதிராக பொலிசாரின் உருவப் பொம்மையை எரித்து எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் தேரர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18