கட்டிடங்களுக்கு மாத்திரம் பணத்தை வாரி இறைக்கும் அரசும் தொண்டு நிறுவனங்களும் பாடசாலைகளின் தளபாட தேவைகள் குறித்து சற்றும் சிந்திப்பதே இல்லை. அத்தகைய தளபாடங்களின்றி வெற்றுத்ரைகளில் அமர்ந்து பாடம் பயிலும் சின்னஞ்சிறு பிஞ்சிசுகளின் பரிதாப கதையிது.
மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையே காத்தான்குடி அன்வர் வித்தியாலயமாகும். சுனாமி தாக்கத்தால் முற்றாக அழிக்கப்பட்ட இப்பாடசாலை தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் கட்டிடங்கள் அமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றது. தரம் ஒன்று முதல் 5 வரை வகுப்புக்களைக் கொண்ட இப்பாடசாலையில் 800 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர்.
கதிரைகள் மேசைகள் இல்லாமல் தரையில் அமர்ந்திருந்து கல்வி கற்கும் இப்பாடசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் பாடசாலையின் நிலைமையை நேரடியாக் கண்டறிந்தார்,
இப்பாடசாலையின் தளபாடப் பற்றாக்குறை குறித்து பாடசாலை ஆசிரியர்களும் பெற்றோர்களும் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இதனையடுத்து சற்று நேரத்தில் சொந்த நிதியிலிருந்து தரம் 01 மாணவர்களுக்கான ஒருதொகுதி கதிரை மேசைகளை அன்பளிப்பு செய்தார்.
- ஜவ்பர்கான்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM