12 இலட்சம் ரூபாவுக்கு குறைவான வருமானம் பெறுபவர்களை வருமான வரி செலுத்துதலில் இருந்து விடுவிக்கவும் வரிய மக்களை மறைமுக வறியில் இருந்து மீட்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார் இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
நாட்டின் வருமானங்களில் வரி வருமானம் முக்கிய பங்கினை வகிக்கின்றது. நாட்டில் வரி அறவீட்டு முறைகள் பல இருந்த போதிலும் அதிகப்படியான வரி சுமை வறிய மக்களையே தாக்கம் செலுத்துகின்றது. அந்த வகையில் நாட்டின் மொத்த செலவை ஈடு செய்வதற்காக 80% சுமையை தாங்குவது மறைமுக வரிசெலுத்தும் வறிய மக்களே வியாபாரிகள், வைத்தியர் வழக்கறிஞர்கள் போன்றோர் பொருட்களை கொள்வனவு செய்யும் போது செலுத்தும் மறைமுக வரியை போன்றே வறிய மக்களும் செலுத்துகின்றனர்.
அந்த வகையில் நாட்டின் மொத்த செலவில் பெரும் பங்கினை அன்றாட வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல கூடிய வருமானம் இல்லாத வறிய மக்கள் சுமக்கின்றனர். எனவே இம்முறைமை மாற்றியமைக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். இதனை கருத்தில் கொண்டு நேரடி வரியை அதிகரித்து வறிய மக்களுக்கு அதிகமாக சுமத்தப்படும் மறைமுக வரி சுமையை குறைப்பதே நிதியமைச்சின் எதிர்பார்ப்பாகும்.
இதன்படி 80 - 20 ஆக உள்ள வரி அறவீட்டு விகிதாசாரத்தை எதிர்வரும் காலத்தில் 60- 40 ஆக குறைக்க நாம் எதிர்பார்த்துள்ளோம்.இதனை இலக்காக கொண்டே புதிய தேசிய வருமான வரி சட்டமூலத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளோம்.
சாதாரண மக்களின் பொருளாதார சிக்கலை குறைக்கும் நோக்கில் முன்வைக்கப்படவுள்ள இவ் வருமான வரி சட்டமூலத்தின் ஊடாக மறைமுக வரி செலுத்துதலில் இருந்து வறிய மக்களை மீட்பதற்கு எதிர்பார்க்கிறோம்.
ஆகையால் தேசிய வருமான வரி சட்டமூலத்திற்கு அமைவாக இது குறித்த ஆரம்ப சட்டமூலத்தை கடந்த சில மாதங்களாக ஆழமாக ஆராய்ந்து உயர் நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களை உள்ளடக்கி மேலும் 111 க்கும் அதிகமான திருத்தங்களுடன் புதிய வருமான வரி சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதன் ஊடாக நாட்டில் 12 இலட்சத்திற்கு குறைவான வருமானம் பெருபவர்கள் வருமான வரி செலுத்தவேண்டி ஏற்படாது என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM