இலங்கை இந்திய நாடுகளுக்கிடையில் சீபாவுக்கு பதிலான பொருளாதார தொழில்நுட்ப உடன்படிக்கையில் பெப்ரவரி மாதம் இரகசியமாக அரசாங்கம் கைச்சாத்திடவுள்ளது. உடன்படிக்கை தொடர்பிலான திட்ட வரைபைகூட இந்திய தூதுக் குழுவினரிடம் இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
இரகசியமாக இவர்கள் செய்யும் இந்த மோசடிகளை நிறுத்தாவிடின் அனைத்து தொழில் சங்கங்களையும் பொதுமக்களையும் ஒன்றிணைத்து அரசாங்கத்திற்கு எதிராக போராடவேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் ஜே.வி.பி தெரிவித்தது.
மக்கள் விடுதலை முன்னணியால் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போதே ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கைக்கு மிகவும் நெருக்கடியான பொருளாதார தொழில்நுட்ப உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாக அண்மையில் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.
முன்னர் கொண்டுவரப்பட்ட சீபா உன்படிக்கை தொடர்பில் பத்து வருடங்களுக்கு மேலாக மாறுபட்ட கருத்துகள் உள்ளன. இலங்கையில் முதலீட்டளர்கள் இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக முரண்பட்டு கருத்துகளையே வைத்துள்ளனர். அதேபோல் இலங்கையில் முன்னைய இரு ஜனாதிபதிகளும் இந்த உடன்படிக்கையை தவிர்த்து வந்துள்ளனர். சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக் ஷ ஆகிய இருவரும் இந்த உடன்படிக்கையை மேற்கொள்ளாது தவிர்த்து வந்துள்ளனர்.
அவ்வாறு இருக்கையில் இப்போது மைத்திரி - ரணில் அரசாங்கம் இந்த சீபாவுக்கு பதிலாக பொருளாதார தொழில்நுட்ப உடன்படிக்கையில் இந்தியாவுடன் கைச்சாத்திட தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வர்த்தக ஊக்குவிப்பி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார். அந்த விபரம் தொடர்பிலான ஆவணத்தையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்தியா இந்த விடயத்தில் அக்கறை காட்டுகின்றது, இந்திய வியாபார நிறுவனம் ஆவலுடன் இருப்பதும் எமக்கு தெரியும். ஆனால் இலங்கையில் யாருடைய வேண்டுகோளுக்கு அமைய இந்த உடன்படிக்கையை செய்யவுள்ளனர் என்ற கேள்வி எழுகின்றது.
அதாவது இந்த இந்திய இலங்கை பொருளாதார உடன்படிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் கைச்சாத்திடபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஏற்பாடுகளை இந்த உடன்படிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேபோல் இந்த உடன்படிக்கை தொடர்பிலான திட்ட வரைபை இந்திய தூதுக் குழுவினரிடம் இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ளது.
இலங்கையின் இந்த வரைபை ஆராய்ந்து விரைவில் இந்திய அரசு நடவைக்கை எடுக்கும் எனவும் இந்த விடயம் தொடர்பிலான முழுமையான உடன்படிக்கை இந்த ஆண்டு நடுப்பகுதியில் கைச்சாத்திடப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. ஆனால் இலங்கையில் எவரிடமும் இந்த திட்ட வரைபுகள் முன்வைக்கப்படவில்லை.
ஆகவே பாராளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் ஆராயாது, இலங்கையில் பொருளாதார வர்த்தக நிபுணர்களின் ஆலோசனை இல்லாது குறிப்பாக மக்கள் வரம் இல்லாது இவ்வாறான உடன்படிக்கையில் கைச்சாத்திட இலங்கை அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை. முதலில் மக்களையும் பொருளாதார, வர்த்தகர்களையும் தெளிவுபடுத்த வேண்டும். அதேபோல் இந்த விடயம் இலங்கையை எவ்வாறு பாதிக்கும் என்பதை முதலில் ஆராய வேண்டும். இலங்கை சர்வதேச பொருளாதார நடவைக்கைகளை கையாள வேண்டும். அதேபோல் இலங்கையில் பொருளாதார நலன்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இந்தியா பெரிய நாடு, நேச நாடு என கூறிக்கொண்டு இவ்வாறான உடன்படிக்கைகளை செய்ய அனுமதிக்க முடியாது. கடந்த 1999 ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்க இந்தியாவுடன் செய்துகொண்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் போது இலங்கை எவ்வாறு நெருக்கடியை சந்தித்தது என்பதை மறந்துவிட கூடாது. உடன்படிக்கை செய்துகொள்ளும் போது இருந்த 463 மில்லியன் டொலர் வர்த்தக மீதியானது இந்த பதினைந்து ஆண்டுகளில் 3977 மில்லியன் டொலர்கள் வரையில் அதிகரித்துள்ளது.
நாம் ஏனைய நாடுகளுடன் மேற்கொள்ளும் பொருளாதார உறவில் எமக்கு கிடைக்கும் இலாபத்திலும் பார்க்க மிகக்குறைவான இலாபமே இந்தியாவுடனான பொருளாதார நடவைக்கைகளின் போது எமக்குக் கிடைக்கின்றது. ஆனால் இந்தியா எமது நாட்டின் வளத்தில் அதிகளவில் இலாபமடைகின்றது. குறிப்பாக இலங்கை இந்திய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மூலமாக இலங்கைக்கு கிடைத்துள்ள வருமானம் என்று எதுவும் இல்லை. எமது வளர்ச்சி பூச்சியம் அளவில் தான் உள்ளது. மாறாக இந்தியா ஒருசில ஏற்ற இறக்கங்களை கண்டிருந்தாலும் அடிப்படையில் முழுமையான நன்மையையும் அடைகின்றது.
ஆகவே உடனடியாக அரசாங்கம் இந்த உடன்படிக்கையை நிறுத்திக்கொள்ள வேண்டும். இரகசியமாக இவர்கள் செய்யும் நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக பாதிக்கின்றன. இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியை சுரண்டும் ஒரு மறைமுக நடவடிக்கையாகவே இதை கவனிக்க வேண்டும். எனவே அரசாங்கம் இந்த மோசடிகளை நிறுத்தாவிடின் அனைத்து தொழில் சங்கங்களையும் பொதுமக்களையும் ஒன்றிணைத்து அரசாங்கத்திற்கு எதிராக போராடவேண்டிய நிலைமை ஏற்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM