இலங்கையின் நலனில் சீனா அக்கறையுடன் உள் ளது. எதிர்வரும் 15 ஆண்டுகளுக்குள் இலங்கையை மற்றுமொரு சிங்கப்பூராக அபிவிருத்தி செய்வதற்கு ஏற்ற வகையில் சீனா செயற்படுகின்றது. இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்தும் வழங்குவோம் என இலங்கைக்கான சீன தூதுவர் யூ ஷியான்லியாங் தெரிவித்தார்.
சீன உதவி திட்டத்தின் கீழ் ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு1.8 மில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்வு தங்காலையில் நடைப்பெற்றது. இதன் போது உரையாற்றும் போதே சீன தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் ,
இலங்கை சீனாவின் மிகச் சிறப்பான நண்பராகும். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்பு 70 ஆண்டுகளுக்கும் மேலான பழைமையான ஒன்றாகும். இரு நாடுகளின் நீண்டகால உறவிற்கு காரணமாகிய இறப்பர்- அரிசி ஒப்பந்தத்தை இரண்டு நாடுகளின் மக்களும் நன்றாக அறிவார்கள். இந்த நட்பின் அடையாளமாக கடந்த பல ஆண்டுகளாக சீனா தனது அனைத்துலக உதவி திட்டத்தில் அதிகூடிய பங்கை இலங்கைக்கு வழங்கி வருகின்றது. இலங்கையின் அபிவிருத்தி மற்றும் இந்த மக்கள் மீது சீனாவிற்கு தனிப்பட்ட அக்கறையும் பொறுப்பும் உள்ளது.
தற்போதைய சூழலில் இலங்கைக்கு அபிவிருத்தி என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். ஆகவே நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்துடன் மக்களும் ஒத்துழைக்க வேண்டும். இலங்கையின் தென்பகுதியில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க சீனா ஒத்துழைப்பு வழங்கும். இந்த பகுதி வாழ் இளைஞர்களின் தொழில்நுட்ப ஆற்றலை விருத்தி செய்தல் , மீன்பிடி மற்றும் ஏனைய துறைகளில் தொழில்நுட்ப வசதிகளை அதிகரித்தல் போன்ற விடயங்களுக்கு சீனா உதவு உள்ளது.
சீன - இலங்கை நட்புறவு சங்கத்தின் மூலம், 1300 இலங்கை மாணவர்களுக்கு சீனா புலமைப்பரிசில் வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இது எதிர்காலத்தில் 2000 ஆக அதிகரிக்கப்பதற்கு சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவ்வாறு பலவேறு திட்டங்கள் தொடர்பில் சீனா மிகவும் ஈடுப்பாடுடன் செயற்படுகின்றது. குறிப்பாக தென்பகுதியில் உள்ள மீனவர்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான திட்டத்தை ஆரம்பிக்கவும் உத்தேசித்துள்ளது.
சீனாவின் ஷங்காய் நகரத்தைப் போன்று இலங்கையின் தென்பகுதியை அபிவிருத்தி செய்வதற்கு சீனா தொடர்ந்தும் தேவையான உதவிகளை வழங்கும். அடுத்த 15 ஆண்டுகளில் இலங்கை சிங்கப்பூரின் நிலைக்கு தரமுயர்த்துவதற்காக சீனா தொடர்ந்து உதவிகளை வழங்கும் . இலங்கையின் நலனில் சீனா அக்கறையுடன் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM