ஸ்பெயினிலுள்ள பள்ளிவாசலொன்றின் கீர்த்திக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அதன் சுவரில் அச்சுறுத்தல் மற்றும் அவதூறு செய்யும் வாசகங்கள் கிறுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று திங்கட்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
அந்நாட்டின் பார்சிலோனா நகரில் பொதுமக்கள் மீது வாகனமொன்றை மோதி நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலொன்றையடுத்தே கிரனடா பிராந்தியத்திலுள்ள மேற்படி பள்ளிவாசலுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
"கொலைகாரர்களே , நீங்கள் உங்கள் நடவடிக்கைக்கு விலை செலுத்துவீர்கள்" மற்றும் வட ஆபிரிக்கர்களை அவதூறு செய்யும் வாசகங்கள் உள்ளடங்கலாக முஸ்லிம்களுக்கு எதிரான சுலோகங்கள் அந்த சுவரில் கிறுக்கப்பட்டிருந்தன.
அதேசமயம் முஸ்லிம்களை தலையைத் துண்டித்து படுகொலை செய்யப் போவதாக அச்சுறுத்தல் விடுக்கும் வாசகங்களும் காணப்பட்டன. இந்நிலையில் கிரனடாவிலுள்ள பிறிதொரு பள்ளிவாசல் மீது 12 பேரைக் கொண்ட குழுவொன்று நடத்திய புகைக் குண்டு தாக்குதலில் அந்த பள்ளிவாசல் முழுவதும் செம்மஞ்சள் புகை பரவியதாகவும் இதனால் பீதியடைந்த வயதுவந்தவர்களும் சிறுவர்களும் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
மேற்படி தாக்குதல்கள் இரண்டுமே இனவாதத் தாக்குதல்களாக கருதப்படுவதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தாக்குதல்களுக்கு எந்தவொரு குழுவும் உரிமை கோராத போதும் வலது சாரி அமைப்பான ஹொகர் சோசலே காரணம் என குற்றஞ்சாட்டப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM