ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிறைவேற்றுக் குழு கூட்டம் அவசரமாக நாளை கூடவிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நிறைவேற்று குழுக் கூட்டம் கொழும்பு மகாவெளி கேந்திர நிலையத்திலேயே அவசரமாக கூடவிருக்கின்றது. இந்த கூட்டத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினர்கள் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்து.
இந்த கூட்டத்தின் போது எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிடுவதா அல்லது வேறு கட்சி அமைத்து போட்டியிடுவதா என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.
இதேவேளை, ஒன்றிணைந்த எதிக்கட்சிகளின் கூட்டமொன்றும் இன்று காலை பாராளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெறவுள்ளதுடன் இதன்போது எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM