வடக்கு, கிழக்கில் படைத்தரப்புக்கள் நிலைகொண்டிருக்கும் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது குறித்து தீர்க்கமான முடிவொன்று எட்டப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்ற சந்திப்பின் ஈற்றில் எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சில நிமிடங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து பிரத்தியேகமாக உரையாடியுள்ளனர்.
குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களின் உடனடிப்பிரச்சினைகள் தொடர்பாக அவசர கவனம் செலுத்தவேண்டுமெனக் கோரியதோடு காணிகளை விடுவிக்குமாறும், காணமல் போனவர்கள் தொடர்பாகவும் மக்கள் தொடர்ச்சியாக வீதிகளில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆகவே அதற்குரிய தீர்வை வழங்குவதாக தாங்களும் வாக்குறுதிகளை வழங்யிருந்தீர்கள். இருப்பினும் அவை இன்னமும் தீராப்பிரச்சினைகளாகவே இருக்கின்றன என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உங்களின் விடயத்தினை உடனடியாக கவனத்திற்கு உட்படுத்துகின்றேன். நாளையே(இன்று) படைத்தளபதிகள், அதிகாரிகளுள் சகிதம் பாராளுமன்றத்திற்கு நான் வருகை தந்து உங்களை(த.தே.கூ) சந்திக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று மாலை 4.30இற்கு பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM