தெஹிவளை அத்திடிய பகுதியில் அண்மையில் தனியார் வங்கி ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தரை சுட்டுக்கொன்றுவிட்டு பணக் கொள்ளையில் ஈடுபட்ட முகத்தை முழுமையாக மறைக்கும் புள் பேஸ் ஹெல்மட் கொள்ளை கோஷ்டி, பாதாள உலகின் கொஸ்கொட தாரக, ஹபராகடுவ வசந்த குழுவினராக இருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற புள் பேஸ் தலைக்கவசம் அணிந்த, நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிக்கொள்ளைகள் பல இந்த பாதாள உலக குழுவினராலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ள பொலிஸார், அதன் சி.சி.ரி.வி.. காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் அதில் உள்ள ஒற்றுமைகளை மையப்படுத்தி அத்திடிய வங்கிக்கொள்ளையும் அந்த குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் தலைமறைவாகி இருக்கும் கொஸ்கொட தாரக உள்ளிட்டோரைக் கைது செய்ய பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார். கறுப்பு நிற கோர்ட் அணிந்து, முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்து ஆயுதத்துடன் இந்த கொள்ளைக் கோஷ்டி மோட்டார் சைக்கிளில் சென்று கடந்த 10 ஆம் திகதி அத்திடிய பகுதியில் தனியார் வங்கியொன்றை கொள்ளையிட்டது.
இதன் போது அவ்வங்கியின் பாதுகப்பு கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரையும் அக்கொள்ளைக் குழு சுட்டுக் கொன்றது. குறித்த கொள்ளைக்கு முன்னர் தெஹிவளையிலும் அத்திடியவிலும் உள்ள தனியார் நிதி நிறுவனங்கள் இரண்டில் இந்த கொள்ளைக் குழு கொள்ளைக்கு முயன்ற போதும் அது சாத்தியப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் அது தொடர்பிலான அனைத்து சி.சி.ரி.வி காட்சிகளும் விசாரணையாளர்களால் அலசப்பட்டுள்ளன.
இந் நிலையில் கடந்த மே மாதம் மீரிகம பகுதியில் தனியார் வங்கி ஒன்றில் இடம்பெற்ற இதனை ஒத்த கொள்ளை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய மேல் மாகாணத்தின் வட பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவு விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்கள், சி.சி.ரி.வி. காட்சிகளுக்கு அமைய இவையனைத்தும் ஒரே குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது. இந்நிலையில் மீரிகம கொள்ளை தொடர்பில் நடந்த விசாரணைகளில் கொஸ்கொட தாரக அதில் தொடர்புபட்டுள்ளதை வெளிப்படுத்திய பொலிஸார், அவன் தலைமறைவாகியுள்ள நிலையில் அவனது சகாவான பலாங்கொட ஒட்டுவாவைக் கைது செய்துள்ளனர். அவனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் மீரிகம கொள்ளை ஹபராகடுவ வசந்தவின் திட்டம் என்பது தெரியவந்துள்ளது.
ஹபராகடுவ வசந்தவின் கீழேயே கொஸ்கொட தாரக செயற்பட்டு வந்த நிலையில் அவ்விருவரும் தற்போது தலைமறைவாகியுள்ளதால் அவர்களை தேடும் படலம் முடுக்கி விடப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM