ஊவா பரணகமை திம்புலன பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலமொன்றினை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
ஊவா பரணகமை திம்புலன பகுதியை சேர்ந்த 33 வயதுடைய தீபிகா பிரியதர்சினி என்ற 3 பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணின் கணவன் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்த பெண்ணின் காதலன் குறித்த பெண்னை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதுடன், கணவன் வருகை தருவதை கண்டு ஓடியுள்ளதாக பொலிஸாரிடம் கணவன் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு சுமார் 7.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் இடம்பெறும்போது குறித்த பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளதுடன் பிள்ளைகள் பாட்டி வீட்டிற்கு சென்றிருந்துள்ளனர்.
குளறுபடியான சம்பவத்தை தீர்ப்பதற்கென பதுளை மாவட்ட பொலிஸார், மோப்ப நாயின் உதவியுடன் தமது விசாரணையை பொலிஸார் முன்னெடுத்தனர். இதன் பயனாக சுமார் 1.5 கிலோ மீற்றர்கள் தூரம் சென்ற மோப்ப நாய், 37 வயதுடைய சந்தேக நபரின் வீட்டை சென்றடைந்தது.
எனினும் சந்தேக நபரும் அவரது மனைவியும் பிரதேசத்தை விட்டு தப்பி ஓடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை குறித்த சந்தேக நபரின் வீட்டின் முன் சுவற்றில் இரத்தம் படிந்திருந்தமையும் அவதானிக்க முடிந்தது.
சந்தேக நபர் 03 பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது. மரண விசாரணைகள் வெலிமடை நீதவான் முன்னிலையில் நடைபெற்றது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஊவா பரணகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்த பெண்ணின் முதலாவது பிள்ளை இன்று புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM