க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் நேற்று நடைப்பெற்ற இரசாயன விஞ்ஞானம் பகுதி II இற்கான வினாக்கள் கம்பஹா மாவட்டத்தில் மேலதிக வகுப்பு நடாத்தும் ஆசிரியர் வழங்கிய கருத்தரங்கு கையேடுகளில் உள்ளடக்கப்பட்டிருந்தமை தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்று நடைப்பெற்ற இரசாயன விஞ்ஞான பகுதி II பரீட்சை வினாத்தாள் முடிவடைந்து பரீட்சை நிலையத்தை விட்டு வெளியில் வந்த கம்பஹா பாடசாலை மாணவிகளுக்கு துண்டுப்பிரசுரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன .
பகிர்ந்தளிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் தன்னால் ஏற்கனவே அனுமானிக்கப்பட்டு தொகுத்து வழங்கப்பட்ட 3 கேள்விகள் இம் முறை பரீட்சையில் கேட்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த வருடம் முதல் கம்பஹா மாவட்டத்தில் உயர் தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது சட்ட விரோதமான செயல் எனவும் குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு விசாரணைகளை மேற்கொள்ளுமாறு எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் இது தொடர்பாக கருத்து வெளியிடுவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே புஷ்பகுமார தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM