சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 06 பேர் கைது.!

Published By: Robert

19 Aug, 2017 | 01:13 PM
image

காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் பெற்றோசோ டெவன் போல் காட்டுப் பகுதியில் சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 6 பேரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். 

Image result for சட்டவிரோத மாணிக்ககல் virakesari

இன்று அதிகாலை 1.30 மணி அளவில் இவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.சி.தர்மபிரிய தலைமையில் நேற்று இரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த 6 பேரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு சில உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர். 

கைது செய்யபட்ட 6 பேரும் பெற்றோசோ தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் 6 பேருக்கும் இன்றைய தினம் பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி கே.சி.தர்மபிரியவினால் பிணை வழங்கப்பட்டு, எதிர்வரும் 22.08.2017 அன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் அஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14