காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் பெற்றோசோ டெவன் போல் காட்டுப் பகுதியில் சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 6 பேரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று அதிகாலை 1.30 மணி அளவில் இவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.சி.தர்மபிரிய தலைமையில் நேற்று இரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த 6 பேரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு சில உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.
கைது செய்யபட்ட 6 பேரும் பெற்றோசோ தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் 6 பேருக்கும் இன்றைய தினம் பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி கே.சி.தர்மபிரியவினால் பிணை வழங்கப்பட்டு, எதிர்வரும் 22.08.2017 அன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் அஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM